Saturday, March 31, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஓடிப் போகலாமா ?

அவளுக்கு அவன் மேல் காதல். எப்படியாவது அவனை மணந்து
கொள்ள ஆசைப் படுகிறாள். அவளுடைய அப்பா, அம்மாவிடம் சொல்லுகிறாள் "இங்க பாருங்க,
நீங்களா கொண்டு போய் என்னை விட்டுவிட்டால் ஒரு பழியும் வராது. நான் வீட்டை விட்டு
ஓடிப் போய் கல்யாணம் பண்ணிகொண்டால் எல்லாருக்கும் கேட்ட பேருதான" என்று சொல்கிறாள்

சொன்னது - ஆண்டாள்

சொல்லியது - நாச்சியார் திரு மொழியில்

அந்த பாசுரம்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத் தனிவழி போயினாள் என்னும்சொல்லு
வந்தபின் னைப்பழி காப்பரிது மாயவன் வந்துருக் காட்டுகின்றான்
கொந்தள மாக்கிப் பரக்கழித்துக் குறும்புசெய் வானோர் மகனைப்பெற்ற
நந்தகோ பாலன் கடைத்தலைக்கே நள்ளிருட் கணென்னை யுய்த்திடுமின்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

சீர் பிரித்த பின்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------
தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் தனி வழி போயினாள் என்னும் சொல்லு
வந்த பின் பழி காப்பது அரிது, மாயவன் வந்து உரு காட்டுகின்றான்
கொத்தளமாக்கி பரக் கழித்து குறும்பு செயவானோர் மகனைப் பெற்ற
நந்த கோபாலன் கடைத்தலைக்கே நள் இருட்க்கன் என்னை உயித்திடுமின்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------


பொருள்

தந்தையும் = அப்பாவும்


தாயும் = தாயும்


உற்றாரும் = உறவினர்களும்


நிற்கத் = இருக்க


தனி வழி = அவர்களை எல்லாம் விட்டு விட்டு
தனியாகப்


போயினாள் = போனாள்


என்னும் சொல்லு = என்று ஊர் சொல்லும் சொல்


வந்த பின் = வந்து விட்டால்


பழி காப்பது அரிது, = அந்த பழியை காப்து கஷ்டம்


மாயவன் = திருமால்


வந்து உரு காட்டுகின்றான் = வந்து எனக்கு அவன் திரு
மேனியை காட்டுகிறான்


கொத்தளமாக்கி பரக் கழித்து = பெண்களின் மனத்
திண்மையை உடைத்து (கொத்தளமாக்கி), குடி கெடுத்து (பரக் கழித்து )


குறும்பு செயவானோர் மகனைப் பெற்ற = குறும்பு
செய்யும் பையனைப் பெற்ற

நந்த கோபாலன் = நந்த கோபாலன்

கடைத்தலைக்கே = வீட்டு வாசலுக்கே

நள் இருட்கண் = நடு நிசியில்

என்னை உய்த்திடுமின் = என்னை கொண்டு போய் விட்டு
விடுங்கள்


ஏன் நடு இராத்திரி போக வேண்டும் ? காலையில போகலாமே ?
நல்ல நாள் பார்த்து கல்யாணம் பண்ணிக் கொடுக்கலாமே ?


ஹுஹும் ... இப்பவே போகணும் அவன் கிட்ட. அது
வரைக்கும் எல்லாம் பொறுக்க முடியாது

கோவ லர்சிறுமி யர்இளங் கொங்கை குதுக லிப்பஉட லுளவிழ்ந்து
எங்கும்
காவ லும்கடந் துகயிறு மாலை யாகி வந்து கவிழ்ந்துநின்
றனரே
என்று சொன்னார் போலே.


பொங்கி வரும் காதல். ஆணை இட்டாலும், அணை இட்டாலும் நில்லாது.

No comments:

Post a Comment