Saturday, March 31, 2012

ஐங்குறுநூறு - இது நம்ம ஆளு

அவன்: டேய், என் ஆளு வர்றாடா

நண்பன்: எங்கடா ?

அவன்: அதோ அங்க white and white பாவாடை தாவணியில்

நண்பன்: டேய், லூசாடா நீ ... எல்லாரும் தான் அந்த dressla இருக்காங்க... இது
ஒரு அடியாளமா ?

அவன்: கைல வளையல பாருடா

நண்பன்: டேய், உனக்கு நேரம் செரியில்ல...காலங்காத்தால வெறுப்பு ஏத்தாத
....

அவன்: சரி, சரி...அந்த கும்பல்ல அழகா சிரிசிகிட்டு வர்றா பாரு, அவ தான் என்
ஆளு

நண்பன்: சரிதான், முத்தி போச்சு காதல் கிறுக்கு, ஐயா சாமி என்னைய
விடு...இதுக்கு மேல இருந்தா, என் மண்டை காஞ்சிரும்


இப்படி, ஒரு பொத்தாம் பொதுவாய் அடையாளம் காட்டும் காதலனை ஐங்குறு நூறில்
காட்டுகிறார் அம்மூவனார்

---------------------------------------------------------------
அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன் துறை
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர்வாய்,
அரம்போழ் அவ்வளைக் குறுமகள்
நரம்பு ஆர்த்து அன்ன தீம்கிளவியளே

-------------------------------------------------------------------




அலங்கு இதழ் = அசைகின்ற இதழ்


நெய்தல் = நெய்தல் மலர்கள் நிறைந்த


கொற்கை முன் துறை = கொற்கை கடற் கரையில்


இலங்கு முத்து = ஒளி பொருந்திய முத்துக்கள்


உறைக்கும் எயிறு = போன்றவை என் காதலின் பற்கள்


கெழு துவர்வாய், = சிவந்த இதழ்கள் (வாய்)


அரம்போழ் அவ்வளைக் = அரத்தால் தீட்டிய அழகான வளையல்கள் அணிந்த கைகள்


குறுமகள் = சின்னவள்


நரம்பு ஆர்த்து அன்ன தீம்கிளவியளே = யாழின்
நரம்பை மீட்டியது மாதிரி இனிமையான குரலை கொண்டவள் .....


காதலனுக்கு, அவன் ஆளின் அழகு தான்
தெரியும்....

1 comment:

  1. super.... I have read Nedunalvadi, from that time i got interest in literature. This is also make me to feel up.

    ReplyDelete