Tuesday, April 3, 2012

கந்தர் அநுபூதி - மணம் கமழும் திருவடி

அம்மா மடியில தல வச்சு படுத்து இருக்கீங்களா ?
சின்ன பிள்ளையா இருக்கும் போது மடில போட்டு தூங்க பண்ணி இருப்பாங்க.

அது இல்ல நான் சொல்றது.

விவரம் தெரிந்த பின், அம்மா மடில தல வச்சு படுத்தது உண்டா ?

அம்மா மடிக்கே ஒரு வாசம் உண்டு.

அனுபவித்தவர்களுக்கு தெரியும்..

அது மாதிரி, முருகன் காலடி பட்ட இடம் எல்லாம் மணம் கமழ்கிறது.

எங்கெல்லாம் அவன் திருவடி பட்டது ?

சொர்கத்தில அவன் காலடி பட்டது.

அப்புறம் ?

தேவர்களின் தலையில்

அப்புறம் ?

வேதங்களின் மேல்

அப்புறம் ?

வள்ளியை மணக்க வேண்டி காடும் மேடும் சுத்திக் கொண்டு திரிந்ததனால், அந்த காட்டிலும், மேட்டிலும் அவன் காலடி பட்டது .

அப்படி பட்ட திருவடி தனக்கு கிடைத்தது என்கிறார் அருணகிரி.

"சரிங்க, கிடைச்சது அப்படிங்கறீங்க, சரி, அதுனால என்ன பிரயோஜனம்"

அப்படின்னு கேட்டா அவரால சொல்ல முடியல. அனுபவிச்சால் தான் தெரியும்.

அந்த சுகத்தை சொல்ல முடியுமா என்று நம்மை திருப்பி கேட்கிறார் ?

----------------------------------------------------------------------
சாடுந் தனிவேல் முருகன் சரணஞ்
சூடும் படிதந் ததுசொல் லுமதோ
வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங்
காடும் புனமுங் கமழுங் கழலே

------------------------------------------------------------------------

சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும்படி தந்தது சொல்லுமதோ
வீடும் சுரர் மாமுடி வேதமும் வெங்
காடும் புனமும் கமழும் கழலே
---------------------------------------------------------------------------

சாடும் = அழிக்கும். விரைந்து சென்று அழிக்கும்.

தனி வேல் = என் வழி தனி வழி மாதிரி , அது ஒரு தனி வேல். எல்லார் கிட்டயும்
இருக்காது.

முருகன் சரணம் = அவனுடைய சரணார விந்தங்கள், திருவடி

சூடும் படி தந்தது = தலையில் படும் படி தந்தது

சொல்லுமதோ ? = சொல்ல முடியுமா ?

வீடும் = வீடாகிய மோக்ஷத்தையும்

சுரர் மாமுடி = சுரர்ணா தேவர்கள். அ-சுரர் அப்படினா அரக்கர்கள். தேவர்களின்
முடி மேலும்

வேதமும் = வேதத்தின் மேலும்

வெங் காடும் = வெம்மையான காடும்

புனமும் = புனை தினம் வளரும் அந்த இடங்களும் (எல்லாம் வள்ளியை செட் up பண்ணத் தான் )

கமழும் = மனம் வீசும்

கழலே = திருவடிகளே

No comments:

Post a Comment