Wednesday, May 30, 2012

கம்ப இராமாயணம் - ஓர் அம்பா இராவணனை கொன்றது?


கம்ப இராமாயணம் - ஓர் அம்பா இராவணனை கொன்றது?


மண்டோதரி புலம்புகிறாள். 

இராவணன் எப்பேர்பட்ட வீரன். 

அவனை ஓர் அம்பா கொல்ல முடியும்?

அவனை ஓர் மானிடன் கொல்ல முடியுமா ? 

ஒரு மானிடனுக்கு இவ்வளவு வீரமா ? 

என்று கேட்பதன் மூலம் அவ்வளவு இருக்காது என்று சொல்கிறாள். 




ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள்  எனத் திறந்துஇவ் உலகுக்கு அப்பால்
 தூரம் போயினஒருவன் சிலை துரந்த சரங்களேபோரில் தோற்று
 வீரம் போய்உரம் குறைந்துவரம் குறைந்துவீழ்ந்தானே! வேறே! கெட்டேன்!
 ஓர்அம்போஉயிர் பருகிற்றுஇராவணனைமானுடவன் ஊற்றம் ஈதோ!


ஆரம் = (முத்து, மணி) மாலைகளை (ஆரம் = மாலை. தே + ஆரம் = தேவாரம்)

போர் = போர்த்திய, அணிந்த

திரு மார்பை = திரு மார்பை

அகல் முழைகள் = அகன்ற குகைகள்

எனத் திறந்து = என்று திறந்து

இவ் உலகுக்கு = இந்த உலகத்தை

அப்பால் = தாண்டி

தூரம் போயின, = தூரம் போயின

ஒருவன் = ஒருவன். அவ்வளவு தான் சொல்லுகிறாள். இராமன் என்று கூட கிடையாது

சிலை = வில்

துரந்த சரங்களே; = துறந்த அம்புகள்

போரில் தோற்று = போரில் தோற்று

வீரம் போய், = வீரம் போய்

உரம் குறைந்து, = வலிமை குறைந்து

வரம் குறைந்து, = வரம் எல்லாம் வலிமை குறைந்து

வீழ்ந்தானே! = வீழ்ந்து கிடக்கின்றானே

வேறே! கெட்டேன்! = நானும் துக்கத்தில் ஆழ்ந்தேன்

ஓர்அம்போ = ஒரு அம்பா

உயிர் பருகிற்றுஇராவணனை? = இராவணின் உயிரை பருகிற்று? (இருக்காது)

மானுடவன் ஊற்றம் ஈதோ! = ஒரு மானிடனின் வலிமை இவ்வளவா (இருக்காது)




பின் எது தான் இராவணனை கொன்றது ? 


மேலே உள்ள link இல் பாருங்கள். எது இராவணனை கொன்றது என்று தெரியும்.



(Appeal: If you like this blog, please click g+1 button below to express your liking)

1 comment:

  1. தன் கணவன் வீழ்ந்து கிடப்பதை "வீரம் போய், உரம் குறைந்து" என்று சொல்வது ஒரு பெண்ணுக்கு எவ்வளவு கஷ்டம்?

    மிக நல்ல பாடல். தந்ததற்கு நன்றி.

    ReplyDelete