Thursday, June 14, 2012

நாலடியார் - ஏமாந்த மீன் கொத்தி பறவை


நாலடியார் - ஏமாந்த மீன் கொத்தி பறவை


அவளின் கண்களை மீன் என்று எண்ணி கொத்தி தின்ன முயன்றது மீன் கொத்திப் பறவை. 

ஆனால், கிட்ட போனவுடன் அவளின் வில் போன்ற புருவத்தை பார்த்து பயந்து கொத்தாமல் சென்று விட்டது.




கண்கயல் என்னுங் கருத்தினால் காதலி
பின்சென்றது அம்ம சிறுசிரல்; -பின்சென்றும்
ஊக்கி யெழுந்தும் எறிகல்லா ஒண்புருவங்
கோட்டிய வில்வாக் கறிந்து.


கண்கயல் = கண்களை கயல் (மீன்)

என்னுங் கருத்தினால் = என்று நினைத்து

காதலி = என் காதலியின்

பின்சென்றது = பின்னால் சென்றது

அம்ம சிறுசிரல் = அந்த சிறு சிரல் என்ற மீன் கொத்தி பறவை

பின்சென்றும் = பின்னால் போய்

ஊக்கி யெழுந்தும் = ஆர்வத்தோடு முயன்றும்

எறிகல்லா = அந்த கண் மீனை கொத்த முடியவில்லை

ஒண்புருவங் = ஒளி பொருந்திய புருவங்கள்

கோட்டிய = வளைந்த

வில்வாக் கறிந்து = வில்லென்று அறிந்து

1 comment:

  1. நம்ம ஆளுங்க கற்பனைக்கே ஒரு எல்லையே இல்லை.

    ReplyDelete