Wednesday, June 13, 2012

திருக்குறள் - காதலா ? நாணமா ?


திருக்குறள் - காதலா ? நாணமா ?


இன்னைக்கு அவன் கிட்ட சொல்லிரலாமா நம்ம காதலை ?

எப்படி சொல்றது ? நேரா போய் "நான் உன்னை காதலிக்கிறேன்" அப்படினா ?

சீ... சீ ... அது ரொம்ப அசிங்கம். அவன் என்னை பத்தி என்ன நினைப்பான்?

பின்ன சொல்லாமையே இருந்திரலாமா ?

அது சரிப் படாது...சொல்லிற வேண்டியது தான்...

ஆனா...ரொம்ப வெட்கமா இருக்கு...ஒரு பொண்ணு போய் எப்படி சொல்ல முடியும்...

சரி அவனா கண்டு பிடிச்சு கேட்டா சொல்லிக்கலாம்...

ஒரு வேளை அவன் கண்டுக்கவே இல்லைனா ?

.................................

ஐயோ, இந்த காதலுக்கும் நாணத்துக்கும் நடுவில் நான் கிடந்து படும் பாடு இருக்கே...போதும்டா சாமி....




காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே 
யானோ பொறேன்இவ் விரண்டு.


காமம் விடு = ஒண்ணு காதலை விடு

ஒன்றோ = இல்லேன்னா

நாண்விடு = நாணத்தை விடு

நன்னெஞ்சே = என்னுடைய நல்ல நெஞ்சே

யானோ பொறேன் = என்னால பொறுக்க முடியாது

இவ் விரண்டு = இந்த இரண்டையும் (காதலையும் நாணத்தையும்)


1 comment:

  1. அருமையான பாடல். நன்றி.

    ReplyDelete