Sunday, December 23, 2012

திரு அருட்பா - நான் வஞ்ச நெஞ்சன், நீயுமா ?


திரு அருட்பா - நான் வஞ்ச நெஞ்சன், நீயுமா ?


எனக்குத் தான் வஞ்ச நெஞ்சம்...உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறேன், பொய் சொல்கிறேன், புறம் சொல்கிறேன்...ஆனால் இறைவா இதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு நீயும் எனக்கு வஞ்சனை செய்தால் நான் என்ன செய்வேன் ? எங்கு போவேன் ? நீயே சொல்லு. 

பாடல்


ஆயும் வஞ்சக நெஞ்சன்இவ் அடியனேன் ஐயா 
நீயும் வஞ்சக நெஞ்சன்என் றால்இந்த நிலத்தே 
ஏயும் இங்கிதற் கென்செய்வேன் என்செய்வேன் எவைக்கும் 
தாயும் தந்தையும் ஆகிஉள் நிற்கின்றோய் சாற்றாய். 

பொருள்

ஆயும் = ஆராய்ந்து பார்த்தால்

வஞ்சக நெஞ்சன் = வஞ்சக நெஞ்சன்

இவ் அடியனேன் ஐயா = அடியேனாகிய நான்
 
நீயும் = நீயும்

வஞ்சக நெஞ்சன்என் றால் = வஞ்சக நெஞ்சன் என்றால் 

இந்த நிலத்தே = இந்த உலகில்
 
ஏயும்  இங்கிதற் = அதற்காக இங்கு 

கென்செய்வேன் என்செய்வேன்  = என்ன செய்வேன், என்ன செய்வேன்

எவைக்கும் = எல்லாவற்றிற்கும்
 
தாயும் தந்தையும் = தாயும் தந்தையும்

ஆகிஉள் நிற்கின்றோய் = ஆகி, உள் நின்றாய்

சாற்றாய் = நீயே சொல்லு 
 

1 comment:

  1. அருமையான, நூதனமான (innovative) கற்பனை இது!

    ReplyDelete