Saturday, February 2, 2013

இராமாயணம் - ஜடாயு மேல் எறிந்த வேல்


இராமாயணம் - ஜடாயு மேல் எறிந்த வேல் 


இராவணனுக்கும் ஜடாயுவுக்கும் பெரிய போர் நடந்தது. ஜடாயுவுக்குத் தெரியும் தான் தோற்று விடுவோம் என்று.

இராவாணன் யார் ?

முக்கோடி வாழ் நாள், முயன்றுடைய பெருந்தவம், எக்கொடி யாராலும் வெல்லப்  படாய்  என்று ஈசன்  கொடுத்த வரம், திக்கு அனைத்தும் அடக்கிய புய வலி, நாரத முனிவர்க்கு ஏற்ப நயம் படைத்த நாக்கு....

கூற்றையும் ஆடல் கொண்டவன் ...

இருந்தும் ஜடாயு போரிட்டான் ? ஏன் ?

அநீதியை எதிர்த்து போரிட வேண்டும் என்று  உணர்த்த.

அந்தப் போரினை கம்பர் காட்டும் அழேகே அழகு.

ஆங்கில இலக்கியத்தில் பெரிய ஆளாக பேசப் படும் ஷேக்ஸ்பியர் கூட போரை வர்ணிப்பதில் அவ்வளவு திறமையானவர் அல்ல என்று சொல்வார்கள். அவருடைய நாடகத்தில் போர் வர்ணனை அவ்வளவு சிறப்பானதாக இருக்காது

இராவண ஜடாயு யுத்தம் பற்றி கொஞ்சம் பார்ப்போம்....

அதில் இருந்து ஒரு அருமையான பாடல்...கம்பனின் உவமை காட்டும் அழகுக்கு ஒரு சின்ன உதாரணம் ...

ஜடாயுவின் மேல் இராவணன் வேலை எறிந்தான்
பொருள் இல்லாமல்
அந்த வேல் ஜடாயு கிட்ட போனது, நின்றது, திரும்பி விட்டது...

அதற்க்கு கம்பன் மூன்று உதாரணம் சொல்கிறான் ...

முதல் உதாரணம்

பொருள் இல்லாமல் ஒரு விலை மாதின் வீட்டிற்கு சென்றவன் போல் நின்று திரும்பியது அந்த வேல்....

என்ன உதாரணம்.....

உள்ளே போக ஆசை தான்...ஆனால் கையில் காசு இல்லை...உள்ளே விட மாட்டாள்...அப்படியே வாசலில் நிற்கிறான்... அவள் வெளியே வந்தால் பார்த்து விட்டு செல்லலாம் என்று. அவளோ, அவன் போக விட்டு வரலாம் என்று இருக்கிறாள். சோர்ந்து ,  அவன் திரும்பி போகிறான்

அது போல் அந்த வேல் திரும்பி போனது...ஜடாயுவின் உடலின் உள்ளே போக முடியாமல் சோர்ந்து திரும்பியது....


பொன் நோக்கியர்தம் புலன் நோக்கிய புன்கணோரும்


பொன்னை (பொருளை ) நோக்கிய விலை மாதரின் அங்கங்களை நோக்க வந்த கவலை தோய்ந்த கண்களை உடையவர் திரும்பி போவது போல ......

இது ஒரு உதாரணம்...

இன்னும் இரண்டு உதாரணம் தருகிறான் கம்பன்...இதை தூக்கி சாப்பிடும் விதத்தில்...

அது என்ன என்று அடுத்த ப்ளாகில் பார்ப்போம் ....










1 comment:

  1. அந்தக் காலத்தில், ML வசந்த குமாரி அவர்களின் பாடல் ஒன்று உண்டு: "கதவைச் சாத்தடி, கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவைச் சாத்தடி" என்று. அதுதான் ஞாபகம் வந்தது.

    ReplyDelete