Wednesday, February 27, 2013

திரு அருட்பா - நள்ளிரவில் பெற்ற பேறு


திரு அருட்பா - நள்ளிரவில் பெற்ற பேறு 



இராமலிங்க அடிகள் இரவு உறங்கிக் கொண்டிருக்கிறார். திடீரென்று விழிப்பு வருகிறது. என்னோவோ நடக்கிறது. ஒரே மகிழ்ச்சி.  வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.

காலை எழுந்து அவர் எங்க போனாலும் எல்லாரும் கேக்குறாங்க, என்ன ஆச்சு, ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்க என்று....சந்தோஷம் தெரிகிறது, அதன் காரணம் தெரிகிறது, ஆனால் அதை சொல்ல முடியவில்லை....திணறுகிறார்...

"என்னால் சொல்ல முடியவில்லை....அந்த இன்பத்தை நீங்களும் அடைந்தால் தான் அது உங்களுக்கு புரியும் " என்கிறார் ....

என்ன நடந்தது என்று அவரால் சொல்ல முடியவில்லை.

அந்த சந்தோஷம் எல்லோருக்கும் வேண்டும் என்று வேண்டுகிறார்.

எவ்வளவு பெரிய மனம். அருள் உள்ளம்.


பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி அருட்
சோதி அளித்து என் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை
ஓதி முடியாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே 

பாதி இரவில் = நள்ளிரவில்.


நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற் பிறவி அறுப்பானே "ஓ" வென்று
சொல்லற் கரியானை சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்
பல்லோரு மேத்தப் பணிந்து

என்பார் மாணிக்க வாசகர் 


எழுந்தருளிப் = இறைவா, நீயே எழுந்தருளி

பாவியேனை எழுப்பி = என்னை எழுப்பி

அருட் சோதி அளித்து = அருள் சோதி அளித்து

என் உள்ளகத்தே = என் உள்ளத்தின் உள்ளே (அகத்தே)

சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய் = சூழ்ந்து + கலந்து + துலங்குகின்றாய் 

நீதி = உலகுக்கே நீதியாணவனே

நடஞ்செய் = நடம் ஆடும்

பேரின்ப நிதி = பேரின்ப நிதி போன்றவனே

நான் பெற்ற நெடும்பேற்றை = நான் பெற்ற இந்த பெரும் பேற்றை

ஓதி முடியாது = சொல்லி மாளாது

என்போல் = என்னை போல

இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே  = இந்த உலகில் உள்ளவர்கள் அனைவரும் பெற வேண்டுவனே 




இந்த பாடலை பொய் என்று எப்படி நினைப்பது ?


3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. 21 வருடம் ஆச்சி மனப்பாடம் செய்து

    ReplyDelete
  3. திருச்சிற்றம்பலம்

    ReplyDelete