Monday, March 25, 2013

கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 2


கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 2 


அருன்ணகிரி நாதர் அருளிச் செய்தது கந்தர் அலங்காரம். 

அதில்   ஒரு பாடல் 

ஒளியில் விளைந்த உ யர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்பெற்ற வெறுந்தனியைத்
தௌiய விளம்பியவா, முகமாறுடைத் தேசிகனே.

சந்தக் கவியான அருணகிரியின் பாடல்களை சீர் பிரிக்காமல் உணர்ந்து கொள்வது கடினம் 

ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்தின் உச்சியின் மேல் 
அளியில் விளைந்த ஓர் ஆனந்தத் தேனை அனாதியிலே 
வெளியில் விளைந்த வெறும் பாழை பெற்ற வெறும் தனியை 
தெளிய விளம்பியவா, முகம் ஆறு உடை தேசிகனே 

நேற்று இந்தப் பாடலின் முதல் வரியை சிந்தித்தோம்.. இன்று இரண்டாவது வரி. 


ஞானத்தின் உச்சியில் இருந்து பார்கிறார் அருணகிரி. என்ன தெரிகிறது ?

அளியில் விளைந்த  


அளி என்ற சொல்லுக்கு அன்பில் விளைந்த அருள் என்று பொருள். ஆங்கிலத்தில் "grace" என்று சொல்லலாம்.

அளியில் விளைந்த ஓர் ஆனந்தத் தேனை 


சாலை, வீடுகள், கட்டிடங்கள் என்று தெரிந்து கொண்டிருந்த ஒரு ஊர், மலை மேல் ஏறி நின்று பார்த்தால் எப்படி இருக்கும் ? அங்கொரு மலை, இங்கொரு குளம், சற்று தள்ளி வளைந்தோடும் ஒரு நதி, இந்த பக்கம் கொஞ்சம் பசுமையான வயல்கள் என்று பார்க்க மிக அழகாக இருக்கும் அல்லவா ?

வாழ்க்கையோடு நாளும் ஒட்டி, உறவாடி அதில் அமிழ்ந்து கிடந்தால் அதில் உள்ள சின்ன சின்ன  விஷயங்கள் கூட பெரிதாய் தெரியும். ஞானம் ஏற ஏற...அதே வாழ்க்கை மிக இனிமையாகத் தோன்ற ஆரம்பிக்கும்.

அன்பில் விளைந்த ஆனந்தத் தேனை....ஆனந்தமான தேன்....

தேன் எப்படி இருக்கும் ? இனிக்குமா, கசக்குமா ? இனிக்கும் என்றால் எப்படி இனிக்கும் ? சர்க்கரை மாதிரி இருக்குமா ? பால்கோவா மாதிரி இருக்குமா என்று கேட்டால்  எப்படி ? அதை அறிய வேண்டும் என்றால் அதை சுவைத்துப் பார்க்க வேண்டும். அந்தத் தேன் எங்கு கிடைக்கும் ? ஞானத்தின் உச்சியில் கிடைக்கும்.




No comments:

Post a Comment