Sunday, March 3, 2013

திருக்குறள் - அத்தனையும் ஒன்றாகப் பெற

திருக்குறள் - அத்தனையும் ஒன்றாகப் பெற 



நம்முடைய ஆசைகள் தான் எத்தனை எத்தனை. அதற்க்கு ஒரு அளவே இல்லை.

நாம் ஆசை பட்டது அத்தனையும் ஒரு வேளை நமக்கு கிடைக்கலாம். ஆனால் அது எல்லாம் ஒன்றாகக் கிடைக்குமா ? இன்னைக்கு கொஞ்சம் நாளைக்கு கொஞ்சம்..அடுத்த வருடம், ஒரு அஞ்சு பத்து வருடம் கழித்து என்று கொஞ்ச கொஞ்சமாக கிடைக்கலாம்.

எல்லாம் ஒன்றாக கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ? அப்படி கிடைக்க என்ன செய்ய வேண்டும் ?

ஒண்ணும் செய்ய வேண்டாம். ஒண்ணே  ஒண்ணு இல்லாமல் இருந்தால் போதும். அந்த ஒண்ணே  ஒண்ணுதான் சோம்பல்.

சோம்பல் இல்லா விட்டால், உலகளந்த பெருமாள் அளந்த அத்தனையும் நீங்கள்  பெறுவீர்கள்.

சரி, எல்லாம் பெறுவோம் என்றே வைத்துக் கொள்ளுங்கள்....வயதான காலத்தில், ஒன்றையும் அனுபவிக்க முடியாத காலத்தில் கிடைத்தால் என்ன பயன் ? சீக்கிரம் கிடைத்தால் தேவலை என்று நீங்கள் கேட்கலாம்.


உலகை அளக்க திருமாலுக்கு எவ்வளவு நேரம் ஆகி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்  ? அவர் ஒவ்வொரு அடியாய் அளக்க வில்லை. ஒரு அடி பூலோகத்தில், அடுத்து ஒரே தாவு மேல் உலகம் எல்லாம் அளந்து விட்டார்.

அது போல் சோம்பல் இல்லாமல் இருந்தால், அவர் பெற்ற உலகம் எல்லாம் அதே மாதிரி உங்களுக்கும் கிடைக்கும்.



மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான்
றாஅய தெல்லா மொருங்கு

சீர் பிரித்த பின்



மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.

பொருள் 


மடி இலா =சோம்பல் இல்லாத

மன்னவன் = மன்னவன்,அதாவது நீங்கள்

எய்தும் = அடையும்

அடி அளந்தான் = திருவடியால் அளந்தான்

தாஅயது = தாவியது. நடந்ததோ ஓடியதோ இல்லை. ஒரே தாவு. 

எல்லாம் = அனைத்தையும். இந்த உலக சுகம் மட்டும் அல்ல, சொர்க்கம் , வைகுண்டம் என்று மறு உலகில் உள்ளதும் கூட ....எல்லாம் அடைவீர்கள் 

ஒருங்கு = ஒன்றாக. தவணை முறையில் அல்ல. ஒன்றாக. 

இது எல்லாம் கொஞ்சம் ஓவரா படல ? வள்ளுவர் பாட்டுக்கு சொல்லிட்டுப் போயிருவாரு. இது எல்லாம் நடக்குமா ? சும்மா உசுபேத்தி விட்டுட்டு போறாரா 

என்னால எவ்வளவு செய்ய முடியும் ? என்னால ஒரு ஆகாய விமானம் வாங்க முடியுமா ? ஒரு கப்பல் வாங்க முடியுமா ? 

என்று நீங்கள் மலைக்கலாம். அதற்கும் வள்ளுவர் விடை தருகிறார் 

If I get at least 5 g+ click, I will write about that also...:)

 

7 comments:

  1. Hope you would have got more than 5 g+. pl write.

    ReplyDelete
    Replies
    1. Nope. Still 4 only. I will wait for one more before starting Kural again....What is the use of writing if there are not even 5 people who likes the writing...

      Delete
  2. I just read this and clicked. Now you must have 5!

    By the way, do you write for the pleasure of writing, or would like a lot of people to read what you write?!?!?

    ReplyDelete
    Replies
    1. I write to share the pleasure of sharing. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற எண்ணம் தான். யாருமே படிக்காவிட்டால் எதற்காக எழுதுவது ?

      Delete
    2. That means the more people read it, the better, right?!

      Why don't you publish your contributions in a mass magazine?

      Delete
  3. (நானும்) உள்ளேன் ஐயா

    ReplyDelete