Tuesday, June 25, 2013

திருவருட்பா - தடைகள்

திருவருட்பா - தடைகள் 


 

சில பேர் இருக்கிறார்கள் ... எந்த வேலை சொன்னாலும் அதை ஏன் செய்ய முடியாது என்று கூறித் திரிவார்கள்.

காலேஜ் முடிச்சப்பறம் ஏன் மேல படிக்கல ? வீடு நிலைமை சரியில்லை.

சும்மாதான வீட்டுல உட்கார்ந்து இருக்க - உருப்படியா ஏதாவது செய்யக் கூடாதா என்றால் - என் மகளுக்கு ஒரு கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் பாரு என்று சொல்வார்கள்.

வேலை செய்யாமல் இருக்க ஏதாவது ஒரு தடை சொல்லித் திரிவது.

காரணமா கிடைக்காது வேலை செய்யாமல் இருக்க.

மழை பெய்தது, ஒரே கூட்டமா இருந்தது, உடம்பு சரியில்லை ...இப்படி ஏதாவது சாக்கு.

வள்ளலார் துறவறம் போகலாம் என்று நினைத்தார். முதலில் அவரின் தாய் விடவில்லை. பின் தாரம் விடவில்லை. பின் பிள்ளைகள் விடவில்லை.. இப்படி ஒண்ணு மாத்தி ஒண்ணு ஏதோ தடை வந்து கொண்டே இருந்தது. கடைசியில் பார்த்தால் ஒரு தடையும் இல்லை...இருந்தும் துறவறம் மேற்கொள்ளவில்லை. அவருக்கே தெரியவில்லை ஏன் என்று. இப்படி தடை சொல்லி சொல்லி   பழகி வேலை செய்யவே முடிய மாட்டேங்குது. என்ன செய்வேன் என்ன செய்வேன் என்று புலம்புகிறார்.

வள்ளலார் துறவிதான். இப்படி உலகம் இருக்கிறதென்று தன்னை கற்பனை பண்ணிச் சொல்கிறார் அடிகளார்.

தாய்தடை என்றேன் பின்னர்த்
          தாரமே தடைஎன் றேன்நான்
     சேய்தடை என்றேன் இந்தச்
          சிறுதடை எல்லாந் தீர்ந்தும்
     தோய்தடைச் சிறியேன் இன்னுந்
          துறந்திலேன் எனைத் தடுக்க
     ஏய்தடை யாதோ எந்தாய்
          என்செய்கேன் என்செய் கேனே.

தடைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். தடையே இல்லாத போதுதான் வேலை செய்வேன் என்று  நினைத்து இருந்தால் ஒரு  நடக்காது. அது மட்டுமல்ல , எல்லா தடைகளும் விலகினாலும் எப்படி வேலை செய்வது என்று தெரியாது. ஏன் என்றால் இதுவரை வேலை செய்து பழகவில்லையே....

எனவே, தடை ஒரு பக்கம் இருக்கட்டும்....வேலையை ஆரம்பியுங்கள்.

வெற்றி உங்களுக்கே.


No comments:

Post a Comment