Sunday, July 14, 2013

திருக்குறள் - அழுக்காறு

திருக்குறள் - அழுக்காறு 




அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.

அழுக்காறு என்றால் பொறாமை. அழுக்கு ஆறு போல வருவதால் அழுக்காறு என்று பெயர் வைத்து இருப்பார்களோ ?

பொறாமை யார் கொள்கிறார்களோ அது அவர்களுக்குத் தான் நிறைய தீமை செய்கிறது.

வள்ளுவர் சொல்கிறார், நாம் யார் மேல் பொறாமை கொள்கிறோமோ, அவர்களை வென்றால் கூட பொறாமை நமக்குத் தீமை செய்து கொண்டே இருக்கும் என்கிறார்.

மேலும், அழுக்காறு உள்ளவர்களுக்கு வேறு பகைவர்களே வேண்டாம். அந்த அழுக்காரே அவர்களுக்கு பகைவர்கள் செய்யும் துன்பத்தைச்  செய்யும்.


அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.



சீர் பிரித்தபின்

அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடு ஈன்பது

பொருள்


அழுக்காறு = பொறாமை

உடையார்க்கு = உடையவர்களுக்கு

அது சாலும் = அதுவே போதும் (வேறு எதுவும் வேண்டாம் )

ஒன்னார் = பகைவர்கள்

வழுக்கியும் = தோற்றபின்னும்

கேடு ஈன்பது  = கேடு தருவது.

ஒரு பகைவர் போன பின்னும், பொறாமை அடுத்தவன் மேல் பாயும். எனவே அது எப்போதும் துன்பம் தந்து கொண்டே இருக்கும்.



No comments:

Post a Comment