Friday, October 18, 2013

திருக்குறள் - தூக்கம்

திருக்குறள் - தூக்கம் 


தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.

தூங்கிச் செயற்பால தூங்குக = தூங்கிச் செய்ய வேண்டிய செயல்களை தூங்கிச் செய்ய வேண்டும் 
தூங்காது செய்யும் வினை, தூங்கற்க = தூங்காமல் செய்யும் வேலைகளை, தூங்காமல் செய்ய வேண்டும். 

அது என்ன தூங்கிச் செய்வது, தூங்காமால் செய்வது ?

வேலைகளை இரண்டு விதமாக பிரிக்கலாம் - நல்லவை, கெட்டவை என்று. 

கெட்ட காரியம் மனதில் தோன்றினால் , அதைத் தள்ளிப் போட வேண்டும். உடனே செய்து விடக் கூடாது. ஆறுவது சினம் என்றாள் அவ்வை. ஆறப் போட்டால் ஆறி விடும் சினம். கோபம் வந்தவுடன் ஏதாவது எழுதுவது, பேசுவது கூடாது. கொஞ்சம் தள்ளிப் போட வேண்டும். 

வர்ற ஆத்திரத்திக்கு அவனை அப்படியே வெட்டிப் போடலாம் என்று தோன்றும். உடனே செய்து விடக் கூடாது. தள்ளிப் போட்டால் அந்த ஆத்திரம் வடியும்.

அழகான பெண் தான்....தொடலாம் போல தோணும்...தொட்டு விடலாமா ?

அதேப் போல நல்ல எண்ணம், காரியம் தோன்றினால் உடனே செய்து விட வேண்டும். தள்ளிப் போடக் கூடாது. 

படிக்க வேண்டும் என்று நினைத்தால், உடனே படிக்க வேண்டும். அப்புறம் நாளைக்கு படிக்கலாம் என்று தள்ளிப் போடக் கூடாது. 

ஒன்றே செய்யவும், நன்றே செய்யவும் வேண்டும், அதுவும் இன்றே செய்ய வேண்டும், அதுவும் இன்னெ செய்ய வேண்டும். 

எந்த வேலையும் செய்வதற்கு ஏற்ற நேரத்தில் செய்ய வேண்டும். 

எல்லா வேலையும் உடனே செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 

1 comment:

  1. நல்ல திருக்குறள். நன்றி.

    ReplyDelete