Tuesday, October 22, 2013

திருக்குறள் - வாயால் சொலல்

திருக்குறள் - வாயால் சொலல் 


எப்பவாவது யாரையாவது திட்டி இருக்கிறீர்களா ? எப்போதாவது பொய் சொல்லி இருக்கிறீர்களா ? பிறர் மனம் வருந்தும்படி பேசி இருக்கிறீர்களா ?

அவை எல்லாம் ஒழுக்கக் குறைவான செயலகள். 

ஒழுக்கம் உடையவர்கள் மறந்து கூட தீய சொற்களை வாயால் சொல்ல மாட்டார்கள். 

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய 
வழுக்கியும் வாயால் சொலல்.

பொருள்


ஒழுக்க முடையவர்க்கு = ஒழுக்கம் உள்ளவர்களுக்கு 
ஒல்லாவே  = முடியாதே 
தீய  = தீய சொற்கள் 
வழுக்கியும் வாயால் சொலல் = தவறிக் கூட வாயால் சொல்லுதல் 

ஒழுக்கம் உடையவர்கள் நினைத்த்தால் கூட முடியாது தவறகா பேசுவது. வழுக்குதல் என்றால் தெரியாமல் , தன் கட்டுப் பாடு இல்லாமல் நடப்பது. அப்படி கூட நடக்காதாம். 

 

No comments:

Post a Comment