Sunday, October 20, 2013

திருக்குறள் - நல்லதும் தீயதும்

திருக்குறள் - நல்லதும் தீயதும் 


திருக்குறளில் சில குறள்கள் "அட" என்று ஆச்சரியப் பட வைக்கும். அப்படிப் பட்ட குறள் ஒன்று. 

செல்வம் செய்வதற்கு நல்லவையெல்லாம் தீயவை ஆகும் ; தீயவை எல்லாம் நல்லவை ஆகும் என்கிறார் வள்ளுவர். 

அதாவது, தீமை செய்யாமல் செல்வம் சேர்க்க முடியாது என்கிறார். அது மட்டும் அல்ல, நல்ல வழியில் செல்வம் சேர்க்க நினைத்தால், அது கூட தீயதாக போய் முடியும் என்கிறார். 

நல்லவை யெல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.

பொருள்

நல்லவை யெல்லாஅம் தீயவாம் = நல்லவை எல்லாம் தீயதாய் முடியும் 

தீயவும் = தீமைகளும் 

நல்லவாம் = நல்லாதாகும் 

செல்வம் செயற்கு = செல்வம் செய்வதற்கு 

நல்லதே செய்து, நேர்மையான வழியில் சென்று செல்வம் சேர்க்க நினைத்தாலும் அது தீயதாய் போய் விடும். 

தீமை செய்தாலும், அது நல்லதாக முடியும் செல்வம் சேர்க்கும் போது.

மிக மிக ஆழமாக சிந்திக்க வேண்டிய குறள். 

1 comment:

  1. பணம் பண்ணுவதற்கு நல்லவையையும், தீயவையும் ஒன்றாக நினைக்க வேண்டும் என்கிறாரோ?

    ReplyDelete