Sunday, December 22, 2013

நன்னெறி - அறிவும் புலன்களும்

நன்னெறி - அறிவும் புலன்களும் 


ஐந்து புலன்களும் மனிதர்களை அலைக் கழிக்கும். ஆனால், அறிவுள்ளவர்களை அந்த ஐந்து புலன்களும் ஒன்றும் செய்யாது. அறிவில்லாதவர்கள்தான் அந்த புலன்கள் பாடாய் படுத்தும்.

சூறாவளி காற்று சிறு துரும்பை சுழற்றிப் போடும், ஆனால் கல் தூண் அசையாமல் நிற்கும்.

பாடல்

பொய்ப்புலன்கள்  ஐந்துநோய் புல்லியர் பாலன்றியே 
மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் - துப்பிற்
சுழன்றுகொல் கல்தூணைச் சூறா வளிபோய்ச்
சுழற்றும் சிறுபுன் துரும்பு. 

பொருள் 

பொய்ப்புலன்கள் = பொய்யான இன்பத்தை தரும் புலன்கள்

ஐந்து நோய் = ஐந்து புலன்களும் நோய் செய்யும் 

புல்லியர் பாலன்றியே = அறிவில்லாத புல்லியர்களுக்கு

மெய்ப்புலவர் தம்பால் = உண்மையான அறிவு உடையவர்களை

விளையாவாம் = அவை பற்றாது

துப்பிற் = ??

சுழன்று கொல்= சுழன்று அடிக்கும் காற்று

கல்தூணைச் = கல் தூணை

சூறா வளிபோய்ச் = சூறாவளி காற்று

சுழற்றும் சிறுபுன் துரும்பு = சுழற்றும் சிறிய துரும்பை

1 comment: