Saturday, February 22, 2014

குறுந்தொகை - சொல்லோ, பிறவாயினவே

குறுந்தொகை - சொல்லோ, பிறவாயினவே 




பெண்ணுக்கு காதல் சங்க காலம் தொட்டு இன்று வரை சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது.

குறுந்தொகைப் பெண்ணின் மனம் படும் பாட்டை இந்த பாடல் விளக்குகிறது.

காதலன் போய் விட்டான். என்ன ஆனான் என்று தெரியவில்லை.

 ஏதோ சொல்லிவிட்டு போய் இருக்கிறான். அந்த சொல்லை அவன்  காக்கவில்லை.

அது என்ன சொல் என்று பாடல் சொல்ல வில்லை. நம் கற்பனைக்கு விட்டு விடுகிறது.

ஒரு வேளை "ஒரு மாதத்தில் வந்து திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி இருப்பானோ ?"

தெரியாது.அப்படி எதுவாவது இருக்கலாம்.

அவள், தன் தோழியிடம் சொல்லி வருந்துகிறாள்.

"என் உடல் வருத்தத்தில் மெலிகிறது. என் வளையல்கள் நெகிழ்ந்து விழுகின்றன. இந்த நோய் என் அம்மாவுக்கு மட்டும் தெரிந்தால் நான் எப்படி உயிர் வாழ்வேன். இந்த நண்டுகளைப் பார். இங்கு விளையாடும் பெண்கள் அதைப் பிடித்து விளையாட நினைக்கிறார்கள். அவர்களுக்கு பயந்து அது கடலை நோக்கி ஓடுகிறது. நல்ல வேளை , கடல் அந்த நண்டை தனக்குள் இழுத்துக் கொண்டு அதன் துயர் தீர்க்கிறது. அவனோ சொன்ன சொல் மாறி விட்டது"



ஆய்வளை ஞெகிழவு மயர்வுமெய் நிறுப்பவும்      
நோய்மலி வருத்த மன்னை யறியின்  
உளெனோ வாழி தோழி விளியா  
துரவுக்கடல் பொருத விரவுமண லடைகரை  
ஓரை மகளி ரோராங் காட்ட  
ஆய்ந்த வலவன் றுன்புறு துனைபரி  
ஓங்குவரல் விரிதிரை களையும்  
துறைவன் சொல்லோ பிறவா யினவே. 

1 comment:

  1. அய்யா, பாட்டு என்னவோ நன்றாக இருக்கும் போலிருக்கிறது - ஆனால் சொற்களின் அர்த்தம் தெரியவில்லையே! பதவுரை எழுதவும். நன்றி.

    ReplyDelete