Saturday, February 15, 2014

கம்ப இராமாயணம் - இலை கூடத் துடிக்காது

கம்ப இராமாயணம் - இலை கூடத்  துடிக்காது 


வாலியின் அரசாட்சி நடக்கிறது. எப்படி தெரியுமா ?

அவனுக்கு சத்தம் கேட்டால் பிடிக்காது.

அதனால், அவன் ஊரில் மழை பெய்யும் போது இடி இடிக்காது.

அங்கு, குகைளில் உள்ள சிங்கங்கள் கர்ஜனை செய்யாது. அந்த சிங்கங்களுக்கு வாலியின் மேல் பயம்.

எங்கே காற்றடித்து அதனால் இலைகள் அசைந்து அந்த சத்தம் கேட்டால் வாலி கோவிப்பானோ என்று பயந்து காற்று கூட இலைகள் வேகமாக அசையாமல் மெல்ல அசையும் படி வீசுமாம்.

அப்படி ஒரு பலசாலி

பாடல்


மழைஇடிப்பு உறா; வய
     வெஞ் சீய மா
முழை இடிப்பு உறா;
     முரண் வெங்காலும் மென்
தழை துடிப்புறச் சார்வு
     உறாது; - அவன்
விழைவிடத்தின்மேல்,
     விளிவை அஞ்சலால்.


பொருள்

மழை இடிப்பு உறா = மழை பெய்யும் போது இடி இடிக்காது 

வய = வலிமை மிக்க

வெஞ் = வெம்மையான

சீய மா = சிங்கம் போன்ற கொடிய விலங்குகள் 

முழை  = குகையில்

இடிப்பு உறா = கர்ஜனை செய்யாது

முரண் = வலிய

வெங் காலும் = பலமாக வீசும் காற்று (கால் என்றால் காற்று)

மென் தழை = மென்மையான தளிர் இலைகள் 

துடிப்புறச் = துடித்தால்

சார்வு உறாது = பக்கத்தில் கூட வராது

அவன் = வாலி

விழை விடத்தின்மேல் = விழைந்து (விரும்பி) இருக்கும் இடத்தின் மேல்

விளிவை அஞ்சலால் = முடிவை எண்ணி அஞ்சுவதால் (வாலியின் கோபத்தால்)

அவ்வளவு பெரிய ஆள் - வாலி



1 comment:

  1. கற்பனைக்கு அளவே இல்லை!

    ReplyDelete