Saturday, February 22, 2014

நாச்சியார் திருமொழி - இது ஒரு பெருமையா ?

நாச்சியார் திருமொழி - இது ஒரு பெருமையா ?

அவனைக் காணாமல் அவளுக்கு துக்கம்  பொங்குகிறது.யாரிடம் சொல்வாள் அவள் ?

மேகத்தினிடம் முறை இடுகிறாள்.

வானிலே கம்பளம் விரித்தது போல இருக்கும் மேகங்களே. என் திருமால் அங்கு வந்தானா ? என் கண்ணீர் என் முலையின் மேல் விழுந்து நான் சோர்ந்து போகின்றேன். நான் அப்படி சோர்ந்து போவது அவனுக்கு ஒரு பெருமையா ?

பாடல்

விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்
தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனை
பெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே?

பொருள்

விண்ணீல = விண் + நீல = நீல நிற வானத்தில்

மேலாப்பு = மேல் ஆடை

விரித்தாற்போல் மேகங்காள் = விரித்ததைப் போல உள்ள மேகங்களே

தெண்ணீர் = தெளிந்த தீர்த்தங்கள்

பாய் = பாய்கின்ற

வேங்கடத்து = திருவங்கடத்தில் உள்ள 

என் திருமாலும் போந்தானே = என் திருமாலும் போனானே

கண்ணீர்கள் = கண்ணீர்கள்

முலைக்குவட்டில் = முலையின் நுனியில்

 துளி சோரச் = துளியாக விழ

சோர்வேனை = சோர்ந்து இருக்கும் என்னை

பெண்ணீர்மை யீடழிக்கும் = பெண்ணின் குணங்களை இப்படி அழிப்பது

இதுதமக்கோர் பெருமையே? = இது அவனுக்கு ஒரு பெருமையா ?

1 comment:

  1. என்ன ஒரு தவிப்பு, என்ன ஒரு பாடல்!

    ReplyDelete