Saturday, March 22, 2014

திருப்புகழ் - இளமை அழகு - பகுதி 2

திருப்புகழ் - இளமை அழகு   



இளமையும் அழகும் எவ்வளவு நாள் ? வெகு வேகமாக இளமை கரையும். முதுமை வந்து சேரும். அதைத் தொடர்ந்து மரணம் வரும்.

அது வருமுன்னே அவனை நினை என்று அறிவுறுத்துகிறார் அருணகிரி.

ஒரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள்.

வாழ்வின் நிலையாமை புரியும்.


கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம்
        இட்டபொறி தப்பிப் பிணங்கொண்ட தின்சிலர்கள்
        கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள்         முறையோடே

 வெட்டவிட விட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
        மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
        விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற            வுணர்வேனோ

 பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல்
        முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை
        பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் முடிசாயத்

தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
        நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி
        சற்சமய வித்தைப் பலன்கண்டு செந்திலுறை            பெருமாளே.


-----------------------------------------------------------------------------------------------------------

 வெட்டவிட விட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
        மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
        விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற            வுணர்வேனோ
---------------------------------------------------------------------------------------------------------


பொருள்

 வெட்ட விட விட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென = வெட்ட விட வெட்ட , கிடஞ்சம் கிடஞ்சம் என்று பறைகள் எழுப்பும் ஒலி ஒரு புறம்.

மக்களொரு மிக்கத் = மக்கள் ஒரு மிக்க = மக்கள் ஒன்றாக 

தொடர்ந்தும் = தொடர்ந்து வந்து  

புரண்டும் = வழி எல்லாம் அழுது புரண்டு 

வழி  விட்டு = வழி விட்டு 

வரு மித்தைத் = வரும் இத்தை = வரும் துன்பத்தை  

தவிர்ந்து = விலக்கி 

உன் பதங்களுற வுணர்வேனோ = உன் திருவடிகளை உள்ளுக்குள் உணர்வேனோ?






(தொடரும்)

1 comment:

  1. என்ன ஒரு சந்தம்! சந்தத்துக்கு அருணகிரியை மிஞ்ச யாருமில்லை என்று சொல்லலாம் போலும்!

    மீதி உரையையும் எதிர்பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete