Saturday, March 22, 2014

அற்புதத் திருவந்தாதி - அக்கோலத்தே அவ்வுருவேயாம்

அற்புதத் திருவந்தாதி - அக்கோலத்தே அவ்வுருவேயாம் 


படித்து அறிவது என்பது ஒன்று
அனுபவத்தில் உணர்ந்து அறிவது என்பது வேறு ஒன்று

அனுபவத்தில் கிடைப்பதை படித்து அறிய முடியாது.

இறை அனுபவம் என்பது படித்து அறிவது அல்ல. ஆயிரம் புத்தகம் படித்தாலும், காதலியின் கடைக் கண் சொல்லும் செய்தி புரியாது. அதற்கு அனுபவம் வேண்டும்.

காரைக் கால் அம்மையார், இறைவனைப் பற்றி  கூறுகிறார்.

பாடல்

நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக!
நீல மணிமிடற்றா னீர்மையே - மேலுலந்த
தெக்கோலத் தெவ்வுருவா யெத்தவங்கள் செய்வார்க்கு
மக்கோலத் தவ்வுருவே யாம்.

பொருள்

நூலறிவு பேசி = புத்தக அறிவு பற்றி பேசி, விவாதம் பண்ணி

நுழைவிலா தார் திரிக! = நுழைவு இல்லாதார் திரிக. அனுபவம் என்ற உணர்வு தன்னில் நுழையாதவர்கள் மனம் போன படி பேசித் திரியட்டும்


நீல மணிமிடற்றா = நீல மணி போன்ற கழுத்தை உடைய

நீர்மையே = கீழாக இருக்கும்
மேலுலந்த = மேல் உலந்த = அனைத்திற்கும் மேலாக இருப்பது

தெக்கோலத் = எந்த கோலத்தில்

தெவ்வுருவா = எந்த உருவத்தில்

யெத்தவங்கள் = எந்த தவங்கள்

செய்வார்க்கு = செய்பவர்களுக்கு

மக்கோலத் = அக் கோலம்

தவ்வுருவே யாம். = அவ் உருவேயாம்

யார் எப்படி, எந்த உருவத்தில், எப்படி நினைத்து தவம் செய்கிறார்களோ, அந்த உருவத்தில்  அவன் இருப்பான்.

மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டில் ஒரு பெண்ணால் எழுதப் பட்ட பாடல்.



No comments:

Post a Comment