Monday, March 3, 2014

திருப்புகழ் - விடத்தை வென்றிடும் படை விழி

திருப்புகழ் - விடத்தை வென்றிடும் படை விழி

திருப்புகழ் - விடத்தை வென்றிடும் படை விழி 


விலை மகளைப் பற்றி கூறும் அதே பாடலில் இறைவனையும் வணங்கும் கலை அருணகிரி நாதருக்கு கை வந்தது.




விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுள
    மருட்டி வண்பொருள் கவர்பொழு தினில்மையல்
    விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழு தொழில்தானே
   விளைத்தி டும்பல கணிகையர் தமதுபொய்
    மனத்தை நம்பிய சிறியனை வெறியனை
    விரைப்பதந்தனில் அருள்பெற நினைகுவ துளதோதான்

சீர் பிரித்த பின் :

விடத்தை வென்றிடும் படை விழி கொண்டு உளம் 
மருட்டி வண் பொருள் கவர் பொழுதில் மையல் 
விருப்பு எனும் படி மடி மிசையினில் விழு தொழில் தானே 
விளைத்திடும் பல கணிகையர் தமது பொய் 
மனத்தை நம்பிய சிறியனை வெறியனை 
விரைப் பதம் தனில் அருள் பெற நினைக்குவது உளதோ தான் 

அப்பாட, கொஞ்சம் மூச்சு  வருகிறது.

பொருள் 

விடத்தை  = விஷத்தை 

வென்றிடும் = வெற்றி கொண்டிடும் 

படை விழி  கொண்டு = படை போன்ற விழிகளை கொண்டு 

உளம் மருட்டி = (நம்) உள்ளத்தை மயக்கி 

வண் பொருள் கவர் பொழுதில் = நம்மிடமுள்ள பொருள்களை கவர்ந்து கொள்ளும் பொழுதில் 

மையல் = ஆசை, காமம் 

விருப்பு = விருப்பம் 

எனும் படி = என்றவற்றில் 

மடி = சோம்பிக் கிடத்தல் 

மிசையினில் விழு தொழில் தானே = கிடந்து அழுந்தி கிடப்பதே வாடிக்கையாய் கொண்ட 
 
விளைத்திடும் = அவற்றை விளைவிக்கும் 

பல கணிகையர் = பல விலை மகளிர் 

தமது பொய் மனத்தை = அவர்களின் பொய்யான மனதை 

நம்பிய = உண்மை என்று நம்பிய 

சிறியனை = அறிவில் சிறியவனை 

வெறியனை = சரி எது தவறு என்று அறியாத வெறி கொண்டவனை 

விரைப் பதம் தனில் = உன்னுடைய திருவடிகளில் 

அருள் பெற நினைக்குவது உளதோ தான் = அருளைப் பெற நினைப்பது எங்கே நடக்கிறது ?


1 comment:

  1. ஜொள்ளு, பக்தி இரண்டும் கலந்த பாடல்! (ஜொள்ளு கொஞ்சம் தூக்கல்!) மீதி இரண்டு செய்யுள்களுக்கும் உரை எழுதவும்.

    ReplyDelete