Wednesday, March 5, 2014

திருப்புகழ் - திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய பெருமாளே.

திருப்புகழ் - திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய     பெருமாளே.


நம்ம திருப்பரங்குன்றம் !

சண்டைக்கு வந்த அசுரர்களை வேல் படையால் அழித்தவனே. திறமை மிக்கவனே. அறிவில் சிறந்தவனே. முத்துக்கள் நிரம்பிய சோலைகள் உள்ள திருப்பரங்குன்றத்தில் எழுந்து அருளிய பெருமாளே

பாடல்

திடத்தெ திர்ந்திடும் அசுரர்கள் பொடிபட 
    அயிற்கொ டும்படை விடுசர வணபவ
    திறற்கு கன்குரு பரனென வருமொரு முருகோனே
   செழித்த தண்டலை தொறுமில கியகுட
    வளைக்கு லந்தரு தரளமு மிகுமுயர்
    திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய     பெருமாளே.

சீர் பிரித்த பின்

திடத்து எதிர்த்திடும் அசுரர்கள் பொடிபட 
    அயிற் கொடும் படை விடும் சரவணபவ
    திறல் குகன் குருபரன் என வரும் ஒரு முருகோனே
   செழித்த தண்டலை தோறும் இலகிய  குட
    வளைக் குலம் தரு தரளமும்  மிகு உயர் 
    திருப்பரங் கிரி வளநகர் மருவிய பெருமாளே.


பொருள்

திடத்து = உறுதியுடன்

எதிர்த்திடும் = எதிர்த்து நிற்கும்

அசுரர்கள் பொடிபட = அசுரர்கள் பொடிப் பொடியாகும் படி 

அயிற் = வேல்

கொடும் படை = சக்தி வாயிந்த படையை

விடும் = விடும்

சரவணபவ = சரவண பொய்கையில் அவதரித்தவனே  (பவ என்றால் பிறப்பு. "என் பவம் தீர்பவனே" என்பார் மணிவாசகர் )

 திறல் குகன் = திறமையான குகப் பெருமாளே

குருபரன் = அனைவர்க்கும் ஞான குருவானவனே

என வரும் = என்று வரும்

ஒரு முருகோனே = முருகப் பெருமானே

செழித்த= செழித்து

தண்டலை தோறும் = குளிர்ந்த சோலைகள் தோறும்

 இலகிய = விளங்கும்

 குட வளைக் = வளைந்த 

 குலம் தரு தரளமும் = சங்குகள் தரும் முத்துகள்

மிகு = மிகுந்த

உயர் = உயர்வான

திருப்பரங் கிரி = திருபரங்குன்றம் என்ற மலையில்

வளநகர் =  வளமையான நகரில்

மருவிய பெருமாளே = இருக்கும் பெருமாளே

அடுத்த முறை திருபரங்குன்றம் பக்கம் போகும் போது, அருண கிரி நாதர் அங்கு நடந்திருக்கிறார் என்று நினைத்துப் பாருங்கள்.




No comments:

Post a Comment