Friday, May 16, 2014

மண்டோதரி புலம்பல் - ஓர்அம்போ, உயிர் பருகிற்று

மண்டோதரி புலம்பல் - ஓர்அம்போ, உயிர் பருகிற்று


'
போரில் இறந்து கிடக்கும் இராவணன் மேல் விழுந்து மண்டோதரி புலம்புகிறாள்.

இராவணன் எவ்வளவு பெரிய வீரன் ? அவன் மார்பை குகைகள் போல ஒரு மானுடனின் அம்பு திறக்க முடியுமா ? ஒரு மனிதனுக்கு அவ்வளவு வீரமா ? இருக்க முடியாது என்ற சந்தேகம் இழையோடுகிறது...


பாடல்


ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள் எனத் திறந்து, இவ் உலகுக்கு அப்பால்

தூரம் போயின, ஒருவன் சிலை துரந்த சரங்களே; போரில் தோற்று

வீரம் போய், உரம் குறைந்து, வரம் குறைந்து, வீழ்ந்தானே! வேறே! கெட்டேன்!

ஓர்அம்போ, உயிர் பருகிற்று, இராவணனை? மானுடவன் ஊற்றம் ஈதோ!


பொருள்


ஆரம் போர்  = ஆரம் போர்த்திய

திரு மார்பை = சிறந்த மார்பை

அகல் = அகன்ற

முழைகள் = குகைகள்

எனத் திறந்து = என்று திரிந்து

இவ் உலகுக்கு அப்பால் = இந்த உலகுக்கு அப்பால்

தூரம் போயின = வெகு தூரம் போயின

ஒருவன் = ஒருவனின்

சிலை = வில்லை

துரந்த சரங்களே = விட்டு விலகிய அம்புகள்

போரில் தோற்று = போரில் தோற்று

வீரம் போய் = வீரமெல்லாம் போய்

உரம் குறைந்து = வலிமை குறைந்து

வரம் குறைந்து =பெற்ற வரங்களின் வலிமை குறைந்து

வீழ்ந்தானே! = போரில் வீழ்ந்தானே

வேறே! = மேலும்

கெட்டேன்! = நான் கெட்டேன்

ஓர்அம்போ, = ஒரு அம்பா

உயிர் பருகிற்று = உயிரை பருகிற்று ?

இராவணனை? = இராவணனின்

மானுடவன் ஊற்றம் ஈதோ! = ஒரு மானிடனின் வலிமை இவ்வளவா ?

இராவணின் உயிரை எடுத்தது ஒரு அம்பு இல்லை, வேறு ஏதோ என்று அடுத்த  பாடலில் சொல்கிறாள்.....






No comments:

Post a Comment