Thursday, May 22, 2014

நள வெண்பா - புலம்பும் சிலம்பும்

நள வெண்பா - புலம்பும் சிலம்பும்  


தமயந்தி நடந்து வருகிறாள். அவள் காலில் கொலுசு ஒலிக்கிறது. அந்த கொலுசு என்ன சொல்லுகிறது தெரியுமா ?

இந்த தமயந்தியின் தனங்களை இவளின் சிறிய இடை தாங்காது என்று அவளின் கொலுசுகள் அவளின் காலைப் பிடித்துக் கொண்டு புலம்பியதாம்.

பாடல்

மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற
மாட்டா திடையென்று வாய்விட்டு - நாட்டேன்
அலம்புவார் கோதை அடியிணையில் வீழ்ந்து
புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு.

பொருள்

மோட்டிளங் கொங்கை = உயர்ந்த இளமையான கொங்கைகள்

முடியச் = வாழ்நாள் முடிய , எப்போதும். இப்போது இளமையாக  இருக்கிறது.இவை இன்னும் வளர்ந்து முடிய நாள்  ஆகும். இப்பவே இதன் பாரம் தாங்க முடியவில்லை. இன்னும் வளர்ந்தால், இந்த இடை என்ன ஆகுமோ என்று கொலுசுக்குத் தவிப்பு.


சுமந்தேற = சுமக்க

மாட்டா திடையென்று = மாட்டாது இடை என்று

வாய்விட்டு = வாய் திறந்து

நாட்டேன் = நாள் + தேன்

அலம்புவார் = அலம்பும் பூக்களை சூடிய. பதமயந்தி சூடிய பூக்களில் தேன் ததும்புகிறது.

கோதை = தமயந்தி

அடியிணையில் = இரண்டு பாதங்களிலும்

வீழ்ந்து = விழுந்து

புலம்புமாம் = புலம்பின

நூபுரங்கள் = கொலுசுகள்

பூண்டு = அணிந்து

காலில் அணிந்துள்ள கொலுசுகள், அவள் காலைப் பற்றிக் கொண்டு புலம்பின.

ஹ்ம் .....

1 comment:

  1. ஆஹா, என்ன சூப்பர் ஜொள்ளு, சூப்பர் கற்பனை! தமயந்தியை நாம் கற்பனை செய்துகொண்டு படித்தால் ... ஆஹா!

    ReplyDelete