Thursday, May 22, 2014

மூதுரை - காக்கை உகக்கும் பிணம்

மூதுரை - காக்கை உகக்கும் பிணம் 


நல்லதை படிக்க வேண்டும், நல்லவரக்ளோடு சேர வேண்டும் என்று சிலருக்கு விருப்பம் இருக்கும். வேறு சிலருக்கோ, ஊர் சுற்ற வேண்டும், தண்ணி அடிக்க வேண்டும், அப்படிப் பட்ட நண்பர்களை கண்டால்  பிடிக்கும்.

குளத்தில் தாமரை மலர் இருக்கும். அன்னப் பறவை  அந்த தாமரை மலரோடு ஒட்டி உறவாடும். காகம், சுடு காட்டில் உள்ள பிணங்களோடு ஒட்டி உறவாடும்.

யார் யாருக்கு எது பிடிக்கிறதோ அதனோடு சேர்ந்து இருப்பார்கள்.

பாடல்

நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ்சேர்ந்தாற்போல்
    கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா [போல்
    மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
    காக்கை உகக்கும் பிணம்.

பொருள்

நற்றா மரைக்கயத்தில்= கயம் என்றால் குளம். நல்ல தாமரைக் குளத்தில்

 நல்லன்னஞ்சேர்ந்தாற்போல் = நல்ல அன்னம் சேர்ந்ததைப் போல

கற்றாரைக் = கல்வி அறிவு  உடையவர்களை

கற்றாரே = படித்தவர்களே

காமுறுவர் = அன்பு செய்வர். அவர்களோடு இருக்க ஆசைப் படுவார்கள்

கற்பிலா = கற்று அறிவு இல்லாத

மூர்க்கரை = முரடர்களை

மூர்க்கர் முகப்பர் = முரடர்களே விரும்புவார்கள்

முதுகாட்டிற் = பழைய காட்டில்

காக்கை = காக்கை

உகக்கும் = விரும்பும்

பிணம் = பிணம்



4 comments:

  1. அந்தக் காலத்தில் படித்த நினைவு வருகிறது! மலரும் நினைவுகள்!

    ReplyDelete
  2. அய்யா அருமை அய்யா

    ReplyDelete
  3. சிறந்த விளக்கம்

    ReplyDelete