Monday, June 23, 2014

இராமாயணம் - அவளை இதுக்கு முன்னால எங்கேயோ பாத்து இருக்கேன்

இராமாயணம் - அவளை இதுக்கு முன்னால எங்கேயோ பாத்து இருக்கேன் 


காதல் வசப்பட்ட நம் பசங்க சொல்லும் டயலாக் "என்னமோ தெரியலடா...அவள பாத்தவுடனேயே மனசு என்னவோ பண்ணுது...இதுக்கு முன்னாடி எப்பவோ அவள பாத்து இருக்கேன் ...ஒரு வேளை போன ஜன்மத்து தொடர்பா இருக்குமோ "

இது நம்ம பசங்க சொல்றது மட்டும் இல்ல....இராவணனும் சொல்கிறான்  - ஒரு படி மேலே போய்.

நம்ம பசங்களாவது பாத்து விட்டு பின் ஜொள்ளு விடுவார்கள்.

இராவணன் பார்க்காமலேயே ஜொள்ளு விடுகிறான்.

இதற்கு முன் சீதையைப் பார்த்தது கூட கிடையாது. இருந்தும் சொல்கிறான்...."கொன்றை காய் போல கூந்தலைக் கொண்ட அந்தப் பெண் என் மனதில் வந்து தங்கி விட்டாள் . அவளை நான் இதற்கு முன்னால் பார்த்து இருக்கிறேன்...".

 பாக்கவும் இல்ல ஒண்ணும் இல்ல...தலைவரு சும்மா உருகுராரு....

பாடல்

'கொன்றை துன்று கோதையோடு ஓர் 
     கொம்பு வந்து என் நெஞ்சிடை 
நின்றது, உண்டு கண்டது' என்று, 
     அழிந்து அழுங்கும் நீர்மையான், 
மன்றல் தங்கு அலங்கல் மாரன் 
     வாளி போல, மல்லிகைத் 
தென்றல் வந்து எதிர்ந்த 
     போது, சீறுவானும் ஆயினான்.


பொருள்

'கொன்றை துன்று = கொன்றை கையைப் போன்ற கூந்தல் உள்ள

கோதையோடு = பெண்ணோடு

 ஓர் கொம்பு வந்து = ஒரு பூங்கொம்பு போன்ற அவள்

என் நெஞ்சிடை நின்றது = என் மனதில் வந்து நின்றாள்

உண்டு கண்டது = அவளை நான் இதற்கு முன் கண்டிருக்கிறேன்

என்று = என்று

அழிந்து = அழிந்து

அழுங்கும் = வருந்தும்

நீர்மையான் = இராவணன்

மன்றல் தங்கு = மணம் பொருந்திய

அலங்கல் = மாலை சூடிய

மாரன் = மன்மதன்

வாளி போல,= அம்பு போல

மல்லிகைத் தென்றல் வந்து எதிர்ந்த  போது = மல்லிகை மணத்தை ஏந்தி வந்த தென்றல் காற்று வந்தபோது. மன்மதனின் அம்புகளில் ஒன்று மல்லிகை மலர். இங்கே தென்றல் மல்லிகை மணத்தை அள்ளிக் கொண்டு வருகிறது. எனவே அது மன்மதனின் அம்பைப் போல இருக்கிறது.

 சீறுவானும் ஆயினான்.= சீற்றம் கொண்டான்.

காதல் படுத்தும் பாடு. 

அப்பேற்பட்ட இராவணனுக்கே இந்த கதி .....


No comments:

Post a Comment