Friday, June 6, 2014

இராமாயணம் - இராவணன் இருந்த இடம்

இராமாயணம் - இராவணன் இருந்த இடம் 


இராவணன் எங்கு இருந்தான் ?

தன்னுடைய அளவற்ற தவ வலிமையால் மூன்று உலகங்களிலும் ஆட்சி செய்த இராவணன், கரிய மேகம் போன்ற கரிய கண்களை கொண்ட பெண்களின் கண்கள் என்ற வெள்ளத்தில் வாழ்ந்தான்.

அவன் மேல் எப்போதும் பெண்களின் கண்கள் மொய்த்த வண்ணம் இருக்கும். ஓரிரண்டு கண்கள்  அல்ல ....கண்கள் என்ற வெள்ளம்.

பாடல்

 இருந்தனன் - உலகங்கள் இரண்டும் 
     ஒன்றும், தன் 
அருந் தவம் உடைமையின், 
     அளவு இல் ஆற்றலின் 
பொருந்திய இராவணன், 
     புருவக் கார்முகக் 
கருந் தடங் கண்ணியர் 
     கண்ணின் வெள்ளத்தே.

பொருள்

 இருந்தனன் = இருந்தான்

உலகங்கள் இரண்டும் ஒன்றும் = மூன்று உலகங்களிலும்

தன் அருந் தவம் உடைமையின் = தன்னுடைய அரிய பெரிய தவத்தால்

அளவு இல் ஆற்றலின் = அளவு இல்லாத ஆற்றலுடன்

பொருந்திய இராவணன் = கொண்ட இராவணன்

புருவக் = புருவம் என்ற

கார்முகக் = கரிய மேகம் மிதக்கும்

கருந் தடங் கண்ணியர் = கரிய பெரிய கண்கள் கொண்ட பெண்களின்

கண்ணின் வெள்ளத்தே = வெள்ளம் போன்ற கண்களில்

எவ்வளவு கண்கள் !


1 comment:

  1. அப்படிப்பட்ட ஆண் வீரன் ஒரு பெண் மேல் கொண்ட மோகத்தால் மாண்டான்!

    ReplyDelete