Wednesday, June 18, 2014

கம்ப இராமாயணம் - இன்ன ஆறு செய்வென்

கம்ப இராமாயணம் - இன்ன ஆறு செய்வென்

சீதையின் எண்ணம் இராவணனை வாட்டுகிறது.

என்ன செய்வது என்று தெரியவில்லை ....யாருக்கு .... நாரத முனிவருக்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவைக் கொண்ட இராவணனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

அரண்மனையில் இருக்கப் பிடிக்கவில்லை அங்கிருந்து எழுந்து அருகில் உள்ள சோலைக்குப் போகிறான்.

பாடல்


அன்ன காலை, அங்குநின்று எழுந்து, 
     அழுங்கு சிந்தையான், 
'இன்ன ஆறு செய்வென்' என்று, ஓர் 
     எண் இலான், இரங்குவான்; 
பன்னு கோடி தீப மாலை, 
     பாலை யாழ் பழித்த சொல் 
பொன்னனார், எடுக்க, அங்கு, 
     ஓர் சோலையூடு போயினான்.


பொருள்

அன்ன காலை, = அந்த நேரத்தில்

அங்கு நின்று எழுந்து = அங்கிருந்து எழுந்து நின்று

அழுங்கு சிந்தையான்,= நொந்த சிந்தனையுடன்

'இன்ன ஆறு செய்வென்' என்று, = என்ன செய்வது என்று

ஓர்  எண் இலான் = ஒரு எண்ணம் இல்லாதவன் 

இரங்குவான்; = வருந்துவான்

பன்னு கோடி தீப மாலை,= நிறைய தீபங்களை ஏந்திய

பாலை யாழ் = பாலை யாழ் என்ற இசைக் கருவியை

 பழித்த சொல் = பழித்த இனிய குரலை உடைய

பொன்னனார், = பொன் போன்ற மேனி கொண்ட பெண்கள்

எடுக்க = ஏந்தி வர

அங்கு = அங்கு உள்ள

ஓர் சோலையூடு போயினான் = ஒரு சோலைக்குச் சென்றான்

அழகான பெண்கள் ஆயிரம் உண்டு அவன் அரண்மனையில்.

அவனுக்கு சீதை தான் வேண்டும்.

விதி.

காமம் மனதில் குடி ஏறும்போது என்ன செய்வது என்று   தெரிவதில்லை. வாழ்வில்  இது வரை பெற்றது எல்லாம் ஒரு பொருட்டாய் தெரிவது இல்லை.

எத்தனை சீதைகளோ

எத்தனை இராவனன்களோ .....


No comments:

Post a Comment