Thursday, June 5, 2014

இராமாயணம் - தையலார் நெடு விழியென கொடிய சரங்கள்

இராமாயணம் - தையலார் நெடு விழியென கொடிய சரங்கள் 





சூர்பனகை கரன் என்ற அரக்கனை அழைத்துக் கொண்டு இராமனோடு சண்டை இட வருகிறாள். கரன் பெரிய படையைக் கொண்டு வருகிறான். அந்த படைகளோடு இராமன் தனியனாக சண்டை இடுகிறான்.

அவன் கையில் இருந்து அம்புகள் புறப்பட்டு சரம் சரமாக சென்று  தாக்குகிறது. அந்த அம்புகள் மிகுந்த துயரத்தைத் தருகின்றன. எப்படி என்றால், பெண்ணின் கண்கள் போல. கூறிய அந்த கண்ணில் இருந்து புறப்படும் பார்வை எப்படி ஆண்களின் மனதை வாட்டுமோ அப்படி என்கிறார் கம்பர்.


பாடல்

கைகள் வாளொடு களம் பட,
     கழுத்து அற, கவச
மெய்கள் போழ்பட, தாள் விழ,
     வெருவிட, நிருதர்
செய்ய மாத் தலை சிந்திட,
     திசை உறச் சென்ற-
தையலார் நெடு விழி எனக்
     கொடியன சரங்கள்


பொருள்

கைகள் = எதிரிகளின் கைகள்

வாளொடு = வாளோடு

களம் பட = நிலத்தில் விழ

கழுத்து அற = கழுத்து அறுபட்டுப் போக

கவச மெய்கள் போழ்பட = கவசம் அணிந்த உடல்கள் இரண்டாகப் பிளக்க

தாள் விழ =  கால்கள் துண்டாகி விழ

வெருவிட, நிருதர் = நிருதர் வெருவிட = அரக்கர்கள் அஞ்ச

செய்ய மாத் தலை சிந்திட = சிவந்த பெரிய தலைகள் சிந்தி விழ

திசை உறச் சென்ற = அனைத்து திசைகளிலும் சென்றன

தையலார் நெடு விழி எனக் = பெண்களின் நீண்ட கண்கள் போல

கொடியன சரங்கள் = கொடுமையான அந்த அம்புகள்


பெண்ணின் கண்கள் என்ன அவ்வளவு கூர்மையா ? அது வாட்டி வதைக்குமா ?

பார்த்தவர்களுக்குத்  தெரியும்.அடி பட்டவர்களுக்குத் தெரியும். ...:)


No comments:

Post a Comment