Friday, August 22, 2014

சிவ புராணம் - ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே - பாகம் 2

சிவ புராணம் - ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே - பாகம் 2 


கடவுளை எங்கே வைப்பது ?

சிலர் பூஜை அறையில் வைத்து இருப்பார்கள்.

சிலர் பர்சில் வைத்து இருப்பார்கள்.

சிலர் கழுத்தில் உள்ள டாலரில் மாட்டி தொங்க விட்டிருப்பார்கள்.

கையில், இடுப்பில் என்று எங்கெல்லாமோ இறைவன்.

கடவுளை மனதில், நெஞ்சில், கருத்தில் வைக்க வேண்டும். கக்கத்தில் வைக்கக் கூடாது.


எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய்
முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூட ரெல்லாம்
கட்டிச் சுருட்டித்தம் கக்கத்தில் வைப்பர், கருத்தில் வையார்
பட்டப் பகலை இரவென்று கூறிடும் பாதகரே.

என்பார்  பட்டினத்தார்.

இதைத்தான் மணிவாசகரும் ,


உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா வெனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே


உள்ளத்துள் ஓங்காரமாய் நின்றவன் என்கிறார்.

இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று சிவ புராணத்தில்  முன்னால்  குறிப்பிட்டார்.

ஞானிகள் எல்லோரும் ஒரே விதமாக சிந்தித்து இருக்கிறார்கள்.




No comments:

Post a Comment