Sunday, August 3, 2014

இராமாயணம் - உலகம் இன்று அழியும்

இராமாயணம் - உலகம் இன்று அழியும் 


இந்திரஜித்து போரில் மாண்டதை  தூதுவர்கள் வந்து இராவணனிடம் சொன்னார்கள்.

அதைக் கேட்ட அங்கிருத்த முனிவர்களும், தேவர்களும், நடனமாடும் பெண்களும் "இன்றோடு இந்த உலகம் அழியப் போகிறது " என்று அஞ்சி ஆளுக்கு ஒரு புறம் சிதறி ஓடினார்கள்.

மகன் இறந்ததைக் கேட்ட இராவணன் எவ்வளவு கோபப் படுவான்...இராவணனின் கோபம் இந்த உலகை அழித்து விடும் என்று அவர்கள் அஞ்சினார்கள்.

பாடல்


மாடு இருந்த வர மாதவர், வானவர்,
ஆடல் நுண் இடையார் மற்றும் யாவரும்,
'வீடும், இன்று, இவ் உலகு' என விம்முவார்,
ஓடி, எங்கணும் சிந்தி ஒளித்தனர்.

பொருள்

மாடு இருந்த = பக்கத்தில் இருந்த (இராவணனின்)

வர மாதவர் = வரம் பொருந்திய பெரிய தவம் செய்தவர்கள்  (முனிவர்கள்)

வானவர் = தேவர்கள்

ஆடல் நுண் இடையார் = ஆடலில் வல்ல சிறிய இடை உள்ள பெண்கள்  

மற்றும் யாவரும் = மற்ற அனைவரும்

'வீடும்,  = வீழும்

இன்று, = இன்று

இவ் உலகு' = இந்த உலகம்

என விம்முவார் = என் விம்மி

ஓடி, எங்கணும் சிந்தி ஒளித்தனர் = சிதறி ஓடி ஒளிந்தார்கள்


No comments:

Post a Comment