Monday, September 1, 2014

பட்டினத்தார் பாடல்கள் - இப்பிறப்பை நம்பி இருப்பாரோ

பட்டினத்தார் பாடல்கள் - இப்பிறப்பை நம்பி இருப்பாரோ


இப்பிறப்பை நம்பி இருப்பாரோ ? நெஞ்சமே 
வைப்பிருக்க வாயில் மனை இருக்கச் - சொப்பனம்போல் 
விக்கிப் பற்கிட்டக் கண் மெத்தப்பஞ் சிட்டு அப்பைக் 
கக்கிச்செத் துக்கொட்டக் கண்டு.

இந்தப் பிறவியை நம்பி யாராவது இருப்பார்களா ? நெஞ்சமே, சொத்து சுகம் எல்லாம் இருக்க, வீடு மனை இருக்க, கனவு போல விக்கல் கொண்டு, பல் கிட்டி, கண் பஞ்சடைந்து, வாயில் எச்சில் ஒழுகி மற்றவர்கள் செத்துப் போவதைக் கண்ட பின்னும், இந்த பிறவியை யாராவது நம்புவார்களா ?

வங்கியில் பணம் இருக்கிறது. ஒண்ணுக்கு இரண்டாக வீடுகள், நிறைய நகை நட்டுகள், மனைவி, பிள்ளைகள் எல்லாரும் இருக்கிறார்கள். பின் எதற்கு உயிரை விட வேண்டும்.

இத்தனையும் நம் உயிரை பிடித்து வைக்க உதவுமா ?

இந்த பிறவியும், இதில் பெற்ற செல்வமும், உறவும் நமக்கு ஒரு விதத்திலும் உதவப் போவது இல்லை. அப்படி இருக்க, இதை யார் நம்புவார்கள்.

பிள்ளைகள் நம்மை காக்க மாட்டார்கள்.

காசு பணம் உதவாது.

இப்படி ஒன்றுக்கும் உதவாதவைகளை நம்பியா வாழ்வது.

வாழ்வின் நிலையாமையை தெள்ளத் தெளிவாக விளக்கும் பாடல்கள்


No comments:

Post a Comment