Saturday, September 27, 2014

தாயுமானவர் பாடல் - பெற்றவளுக்கே தெரியும்

தாயுமானவர் பாடல் - பெற்றவளுக்கே தெரியும் 


பிள்ளை பெறுவதின் வலி ஒரு தாய்க்குத் தான் தெரியும்.  பிள்ளை பெறாத பெண் அந்த வலியை அறிய மாட்டாள். எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அவளுக்கு அது  புரியாது.

அது போல

பேரானந்தம் அடைந்தவர்களுக்கே உள்ளம் நெகிழ்வதும், கண்ணீர் மல்குவதும்  உண்டாகும்.மற்றவர்கள் நெஞ்சம் கல் நெஞ்சமாகவே  இருக்கும்.

பாடல்

பெற்றவட்கே தெரியுமந்த வருத்தம் பிள்ளை
பெறாப்பேதை யறிவாளோ பேரா னந்தம்
உற்றவர்க்கே கண்ணீர்கம் பலையுண் டாகும்
உறாதவரே கல்நெஞ்ச முடைய ராவார்.

பொருள்

பெற்றவட்கே = பெற்றவளுக்கே

தெரியுமந்த = தெரியும் அந்த

வருத்தம் = வருத்தம்

பிள்ளை பெறாப் பேதை யறிவாளோ = பிள்ளை பெறாத பேதைப் பெண் அறிவாளோ (அந்த வலி) 


பேரா னந்தம் = பேரானந்தம்

உற்றவர்க்கே =அடைந்தவர்களுக்கே

கண்ணீர் கம்பலையுண் டாகும் = கண்ணீரும் கம்பலையும் உண்டாகும்

உறாதவரே = அது  அடையாதவர்கள்

கல் நெஞ்சமுடைய ராவார் = கல் நெஞ்சம் உடையவர்களே



1 comment:

  1. This creates two mutually exclusive worlds.

    For example, if someone says he can see the "mysterious red cow on top of every tree", then people would ask him to show it. Then he can very well say: "Well, if you are ready, you will see it; if you don't see it, that means you are not ready." That is a self-referential, self-closing argument. Then the only possible response is to leave that guy with his mysterious red cow!!

    ReplyDelete