Wednesday, December 10, 2014

தேவாரம் - நிலை பெறுமாறு எண்ணுதியேல்

தேவாரம் - நிலை பெறுமாறு எண்ணுதியேல் 


எதுதான் நிலையாக இருக்கிறது நம் வாழ்வில்.

நேற்று இருந்தது போல இன்று எது இருக்கிறது.

மனம், அது நொடிக்கு ஒரு தரம் மாறிக் கொண்டிருக்கிறது.

 சுற்றமும்,உறவும்  அப்படியே.

செல்வம் - வரும்,  போகும்.

ஆரோக்கியம் - இன்றிருக்கும், நாளை போகும்.

வாலிபம், இளமை எல்லாம் அப்படித்தான்.

அப்படியென்றால், எது தான் நிலைத்து நிற்கும் ?

நிலையான ஒன்றை வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார் அப்பர்.



நிலை பெறுமாறு எண்ணுதியேல், நெஞ்சே! நீ
        வா! நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு, 
புலர்வதன் முன் அலகிட்டு, மெழுக்கும் இட்டு,
             பூமாலை புனைந்து ஏத்தி, புகழ்ந்து பாடி, 
தலை ஆரக் கும்பிட்டு, கூத்தும் ஆடி, “சங்கரா,
                     சய! போற்றி போற்றி!” என்றும், 
“அலை புனல் சேர் செஞ்சடை எம் ஆதீ!”

    என்றும், “ஆரூரா!” என்று என்றே, அலறா நில்லே!.

No comments:

Post a Comment