Monday, February 2, 2015

திருவாசகம் - காட்டாதன எல்லாம் காட்டி

திருவாசகம் - காட்டாதன எல்லாம் காட்டி 


சிற்றின்பம், பேரின்பத்திற்கு வழி  காட்டுகிறது.

சிற்றின்பத்தையே அறிய முடியாவிட்டால் பேரின்பத்தை எப்படி அறிவது ?

மாணிக்க வாசகர் பெண்ணாக மாறி உருகுகிறார்.

ஒரு இளம் பெண்,  தன் தோழியிடம், அவளுடைய காதலன் எப்படியெல்லாம் அவளிடம் நடந்து கொண்டான் என்று வெட்கப்பட்டு கூறுகிறாள்.

"  கேட்டாயோ தோழி, என்னை அவன் தந்திரம்  செய்தான். அவன் வீட்டு மதிள் சுவர் மிகப் பெரியாதக இருக்கும். அதில் படங்கள் எல்லாம் வரைந்து இருப்பார்கள். அவன் எனக்கு என்னவெல்லாமோ காட்டினான். சிவத்தைக் காட்டினான். அவன் பாதங்களைக் காட்டினான். அவனுடைய கருணையைக் காட்டினான். எல்லோரும் சிரிக்க என்னை மேலுலகம் சேர்பித்தான் . என்னை ஆட்க் கொண்டவனை சொல்லி நாம் அம்மானை ஆடுவோம்"  என்கிறார்.

பாடல்


கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறொருவன்
தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித்
தாட்டா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி
நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த
ஆட்டாண்கொண் டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய்.

பொருள்

கேட்டாயோ தோழி = தோழி, கேட்டாயா ?

கிறிசெய்த வாறொருவன் = கிறி செய்தவாறு ஒருவன். கிறி என்றால் தந்திரம். ஒருவன் தந்திரம் செய்து

தீட்டார் = தீட்டப்பட்ட (ஓவியங்கள் )

மதில் = சுவர்

புடை சூழ் = சூழ்ந்து இருக்க

தென்னன் = தென்புறத்தை சேர்ந்தவன்

பெருந்துறையான் = திருப் பெருந்துறையில் உள்ளவன்

காட்டா தனவெல்லாங் காட்டிச் = காட்டதனவெல்லாம் காட்டி. இதுவரை கான்பிக்கதவற்றை எல்லாம் காண்பித்து

சிவங்காட்டித் = சிவத்தைக் காட்டி

தாட்டா மரைகாட்டித் = தாள் + தாமரை + காட்டி = தாள் என்கிற தாமரையைக் காட்டி

தன்கருணைத் தேன்காட்டி = தன்னுடைய கருணையான தேனினைக் காட்டி

நாட்டார் நகை செய்ய  = நாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் நகைக்க

நாம்மேலை வீடெய்த = நாம் மேலை வீடு எய்த . நாம் சொர்கத்தை அடைய

ஆட்டாண்  = ஆள் + தான் = அவன் தானே

கொண்டாண்ட வா = கொண்டான் (ஆட் கொண்டான்)

பாடுதுங்காண் அம்மானாய் = நாம் அம்மானை பாடுவோம்

மணிவாசகர் ஒரு அரசின் முதல் அமைச்சராக  இருந்தவர்.பெரிய அறிவாளி. 35 வயது இருக்கும்.

பெண்ணாக மாறி  உருகுகிறார்.

கேட்டாயோ தோழா என்று ஆரம்பித்து  இருக்கலாம்.கேட்டாயோ தோழி என்று  தொடங்குகிறார்.

பெண்ணின் இயல்பு எளிதில் சரணாகதி அடைய வழி வகுக்கும்.

இன்று பெண்ணீயம் பேசுபவர்கள் பெண்களை ஆண்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றே   கருதுகிறேன்.

மணிவாசகர் பெண்ணாக  உருக்கினார்.

80 வயதில் நாவுக்கரசர் பெண்ணாக உருகினார்.

நம்மாழ்வாரும் அப்படியே...

பெண்ணில் அப்படி என்னதான் இருக்கிறது ?



No comments:

Post a Comment