Friday, March 6, 2015

திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை

திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை 


எவ்வளவு செல்வம் நமக்கு வேண்டும் ?

நாம் எதற்கு செல்வம்  சேர்கிறோம்.முதலில் தேவைக்கு சேர்கிறோம். பின் எதிர்காலத்திற்கு வேண்டும் என்று சேர்கிறோம்.

எவ்வளவு வேண்டும் எதிர் காலத்திற்கு ? சேர்த்துக் கொண்டே  போகிறோம்.

எவ்வளவு பணம் சேர்த்து வைத்தால் நம் எதிர் காலம் கவலை இன்றி கழியும் ?

நம் செல்வத்தை விடுங்கள்....ஒரு அரசனின் செல்வம் ஒன்றும் இல்லாமல் போகும் என்றால் நம் செல்வம் எந்த மூலை ?

சேர்த்த பொருளை அனுபவிக்கிறோமா என்றால் இல்லை. யார் யாருக்கோ கொடுத்து விட்டுப் போகிறோம்.  கொஞ்சம்  பிள்ளைகளுக்கு,கொஞ்சம் அரசாங்கத்திற்கு, கொஞ்சம் தான தர்மம் என்று யார் யாருக்கோ கொடுத்து விட்டுப் போகிறோம்.

இதற்கா இந்தப்  பாடு ? இதற்கா இத்தனை காலம் செலவழித்தோம் ?

திருமந்திரத்தில், திருமூலர் செல்வத்தின் நிலையாமை பற்றி  சொல்லுகிறார்.


அரச  பதவியும்,அதிகாரமும், ஆனையும் தேரும் பொருளும், பிறர் கொள்ளப் போவதற்கு முன், உயிரைத் தொடும் செல்வனை (இறைவனை ) அடையாமல் போனால் அது நல்ல தவமாகாது


பாடல்

அருளும் அரசனும் ஆனையுந் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னந்1
தெருளும் உயிதொடுஞ் செல்வனைச் சேரின்
மருளும் பினையவன் மாதவ மன்றே.

பொருள்

அருளும் = அரச ஆணையும்

அரசனும் = அரசனும்

ஆனையுந் தேரும் = யானையும் தேரும்

பொருளும் = செல்வமும்

பிறர்கொள்ளப் போவதன் முன்னந் = பிறர் கொண்டு போவதன் முன்

தெருளும் = அறிவின் தெளிவோடு

உயிதொடுஞ்  = உயிரைத் தொடும்

செல்வனைச் சேரின் = செல்வனாகிய இறைவனை சேர்ந்தால்

மருளும் = மயங்கி 

பினையவன் = பிணைந்தால்

மாதவ மன்றே.= மாதவமாகாது


 

No comments:

Post a Comment