Wednesday, April 8, 2015

இன்னிலை - தூமலரின் மென்மை அறிந்து துய்க்க

இன்னிலை - தூமலரின் மென்மை அறிந்து துய்க்க 


கணவன் மனைவி உறவு என்பது மிக மிக அந்தரங்கமானது. மென்மையானது. காதலும், காமமும் கலந்தது.

கணவன் மனைவி உறவு சிக்கல் நிறைந்ததும் கூட. யார் பெரியவர், யார் வீட்டுக்காக அதிகம் உழைக்கிறார், கருத்து வேறுபாடு வரும்போது எப்படி அவற்றை சரி செய்வது போன்ற சிக்கல்கள் வரமால் இருக்காது.

இந்த கணவன் மனைவி உறவு பற்றி இன்னிலை ஒரு பாடலில் சொல்ல்கிறது.

கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் சமமானவர் என்ற எண்ணம் வேண்டும்.

இருவரில் யாரும் மற்றவரை விட உயர்ந்தவர் அல்ல.

ஒருவர் மேல் ஒருவர் விருப்பப்பட வேண்டும்.

அந்த விருப்பம் நிலையானதாக இருக்க வேண்டும்.

அப்படி உயர்வு தாழ்வு இல்லாமல், ஒருவர் மேல் ஒருவர் நிலைத்த அன்போடும் விருப்போடும் இருந்து செய்யும் இல்லற செயல்களை உலகம் அறியும்.

அவர்கள் தங்களுக்குள் உள்ள காதலை, காமத்தை ஒரு மென்மையான மலரை கையாள்வது போல கையாள வேண்டும்.

மனைவி வாழ்வின் துணை, வாழ்க்கைக்கு துணை என்று அறிந்து அவளோடு இல்லறம் நடத்த வேண்டும்.


பாடல்


ஒப்புயர்வில் வேட்டோ னொருநிலைப்பட் டாழ்ந்தசெயல்
நப்பின்னை ஞால மொருங்கறிக-துப்பாராய்த்
தூமலரின் மென்மையுறு தோற்றத்தே வைத்துய்க்க
ஏமக் கிழத்தி யறிந்து.

சீர் பிரித்த பின்

ஒப்பு உயர்வு இல் வேட்டோன் ஒரு நிலைப்பட்டு ஆழ்ந்த செயல்
நப்பின்னை ஞால ஒருங்கு அறிக - துப்பாராய்த்
தூமலரின் மென்மை உறு  தோற்றத்தே வைத்து துய்க்க 
ஏமக் கிழத்தி அறிந்து 

பொருள்

ஒப்பு = ஒருவருக்கு ஒருவர் ஒப்பானவர்கள், சமமானவர்கள்

உயர்வு இல் = ஒருவரை விட மற்றவர் உயர்ந்தவர் அல்ல

வேட்டோன் = ஆசைப் பட்டவன், காதலன்

ஒரு நிலைப்பட்டு = ஒரு நிலையில், மனம் அலையாமல்

ஆழ்ந்த செயல் = உறுதியுடன் செய்யும் இல்லறம் சம்பந்தப் பட்ட செயல்கள்

நப்பின்னை  = நப்பின்னை (?) . இதை நப்பினையின் (கண்ணனின் மனைவி ) வாழ்வால் அறியலாம் என்று உரை சொல்கிறார்கள். அவ்வளவு சரியாகப் பட வில்லை.

ஞால = உலகு

ஒருங்கு அறிக = ஒன்றாக அறிக

 துப்பாராய்த் = மனத் தூய்மையுடன்

தூமலரின்  = தூய மலரின்

மென்மை உறு  தோற்றத்தே  = மேனமியான தோற்றத்தை

வைத்து  = மனதில் வைத்து

துய்க்க = இன்பம் அனுபவிக்க

ஏமக் = இல்லத்துக்கு காவலாய் இருக்கும்

கிழத்தி =தலைவியின்

அறிந்து = தன்மை அறிந்து



No comments:

Post a Comment