Saturday, May 23, 2015

இராமாயணம் - ஒருவன் நாமம்

இராமாயணம் - ஒருவன் நாமம் 


நாராயாணா என்ற நாமத்தின் பெருமையை பிரகலாதன் தன் தந்தையான இரணியனிடம் கூறுகிறான். 

பாடல்

"காமம் யாவையும் தருவதும், அப் பதம் கடந்தால்,
சேம வீடு உறச் செய்வதும், செந் தழல் முகந்த
ஓம வேள்வியின் உறு பதம் உய்ப்பதும், ஒருவன்
நாமம்; அன்னது கேள்; நமோ நாராயணாய!

பொருள்

"காமம் யாவையும் தருவதும் = நாம் ஆசை பட்டது அனைத்தையும் தருவதும்

அப் பதம் கடந்தால் = அவற்றைக் தாண்டி

சேம வீடு உறச் செய்வதும் = வீடு பேறு பெற உதவுவதும்

செந் தழல் முகந்த = சிவந்த நெருப்பு ஜொலிக்கும்

ஓம வேள்வியின் உறு பதம் உய்ப்பதும் =வேள்வியின் பலன்களைத் தருவதும்

ஒருவன் நாமம்; = ஒருவனின் நாமம்

அன்னது கேள்; = அது எது என்று கேட்டால்

நமோ நாராயணாய! = நமோ நாராயணாய

சிந்திக்க சிந்திக்க  அர்த்தங்கள் ஊறிக் கொண்டே இருக்கும் பாடல்.

எங்கு தொடங்குவது, எங்கு நிறுத்துவது. இப்படி எத்தனை பாடல்கள். எத்தனைக்கு அர்த்தம்  சொல்லிவிட முடியும் ?

சொல்லிய அர்த்தங்கள் முடிவானதா என்றால் அதுவும் இல்லை.

என்ன தான் செய்வது ?


1 comment: