Sunday, June 14, 2015

அறநெறிச்சாரம் - அற நூல்களைப் படிக்க வேண்டும்

அறநெறிச்சாரம் - அற நூல்களைப் படிக்க வேண்டும்


நம் முன்னால் எத்தனை விதமான நூல்கள் இருக்கின்றன.

ஒரு புத்தகக் கடைக்குப் போனால் என்னென்ன வகை புத்தகங்கள் இருக்கின்றன ?

மர்ம நாவல்கள், சண்டை நாவல்கள், thrillers , என்று ஒரு வகை.

ஆசையை தூண்டும், காமத்தை தூண்டும், வகையான நூல்கள் இன்னொரு வகை.

இது போக மக்களை குழப்பும் ஏனைய நூல்கள். வாரப் பத்திரிகைகள், மாத நாவல்கள், என்று பலவிதமான நூல்கள்.

"மக்களை நல் வழிப் படுத்த, மக்களின் நிலையை உயர்த்த, மக்களுக்கு நல்லது கெட்டதை சொல்ல உள்ள புத்தகங்கள் மிக மிக குறைவு. அவற்றை தேடி கண்டு பிடித்து படிப்பவர்கள் புண்ணியம் செய்தவர்கள். அவர்களே பிறவி என்ற துன்பத்தை கடந்து போகும் பேறு பெற்றவர்கள்."


பாடல்

மறவுரையும் காமத் துரையும் மயங்கிய 
பிறவுரையும் மல்கிய ஞாலத்-தறவுரை
கேட்கும் திருவுடை யாரே பிறவியை
நீக்கும் திருவுடையார்.

சீர் பிரித்த பின்

மற உரையும்  காமத்து உரையும் மயங்கிய 
பிற உரையும் மல்கிய ஞாலத்து அற உரை 
கேட்கும் திரு உடையோரே பிறவியை
நீக்கும் திரு உடையோர் .

பொருள்

மற உரையும் = சண்டை, சச்சரவு, அடி தடி என்று உரைக்கும் நூல்கள்

காமத்து உரையும் = காமம் மற்றும் ஆசையைத் தூண்டும் நூல்களும்

மயங்கிய = அறிவை மயக்கும்

பிற உரையும் = மற்ற பிற நூல்களும்

மல்கிய = நிறைந்து கிடக்கும்

ஞாலத்து = இந்த உலகில்

அற உரை = அறத்தை சொல்லும் நூல்களை

கேட்கும் = படித்தும் , கேட்டு அறியும்

திரு உடையோரே = புண்ணியம் உடையவர்களே

பிறவியை நீக்கும் = பிறவியை நீக்கும்

திரு உடையோர் = புண்ணியம் உடையவர்கள்

குப்பைகளை தள்ளி விட்டு, நல்லதை தேடி, கண்டு பிடித்து, படியுங்கள்.

பிறவி பிணியை போக்கும் அரு மருந்து அதுவே ஆகும்.

2 comments:

  1. Without your blog we won't even know such wonderful poems are there in Tamil.

    ReplyDelete
  2. I second that :)

    ReplyDelete