Monday, August 24, 2015

இராமாயணம் - போக்கினேன், ஆக்கினேன்

இராமாயணம் - போக்கினேன், ஆக்கினேன் 


"என்னது என் தந்தை தசரதன் இறந்து போனானா? என் அண்ணன் கானகம் போனானா ? ஏன் ? எப்படி நடந்தது இது ?" என்று அதிர்ச்சி அடைந்து பரதன் கைகேயிடம் கேட்டான்.

அதற்கு கைகேயி

தசரதனை "அவன்" என்று குறிப்பிடுகிறாள்.

"அவன் தந்த இரண்டு வரத்தினால் இராமனை கட்டுக்கு அனுப்பினேன், உன்னை நாட்டுக்கு அரசனாக்கினேன், அது பொறுக்காமல் அவன் உயிரை விட்டு விட்டான்"

என்று ஏதோ தன் பேரில் ஒரு குற்றமும் இல்லாத மாதிரி  மிகச் சாதரணமாக சொல்லி முடிக்கிறாள்.

பாடல்

‘வாக்கினால் வரம் தரக் கொண்டு, மைந்தனைப்
போக்கினேன், வனத்திடை; போக்கி, பார் உனக்கு
ஆக்கினேன்; அவன் அது பொறுக்கலாமையால்,
நீக்கினான் தன் உயிர், நேமி வேந்து’ என்றாள்.

  பொருள்

‘வாக்கினால் வரம் தரக் கொண்டு = தசரதன் முன்பு வரம் தந்தான். அதை, நிறைவேற்றுவதாக இப்போது வாக்கு தந்தான். அதன்  மூலம்

மைந்தனைப் போக்கினேன், வனத்திடை; = இராமனை காட்டுக்கு அனுப்பினேன்

போக்கி = அனுப்பி விட்டு

பார் உனக்கு ஆக்கினேன்; = இந்த உலகை உனக்கென்று ஆக்கினேன்

அவன் = தசரதன்

அது பொறுக்கலாமையால் = அதைப் பொறுக்காமல்

நீக்கினான் தன் உயிர் = உயிரை விட்டு விட்டான்

நேமி வேந்து’ என்றாள் = அதிகார சக்ரத்தை  செலுத்தும் அரசன் என்றாள்

இந்த பாட்டில் நிறைய ஆழ்ந்த அர்த்தங்கள் உண்டு.

அவற்றை நாளை பார்ப்போம்.



No comments:

Post a Comment