Monday, August 10, 2015

இராமாயணம் - வாழ்வில் முன்னேற

இராமாயணம் - வாழ்வில் முன்னேற 


வாழ்வில் முன்னேற வேண்டும் என்று விரும்பாதார் யார் ? எல்லோரும் முன்னேறுவதையே விரும்புவார்கள்.

ஆனால், எப்படி முன்னேறுவது ?

கடின உழைப்பு, இறைவன் அருள், ஆன்றோர் ஆசீர்வாதம், பெற்றவர் மற்றும் உற்றாரின் அரவணைப்பு, நண்பர்களின் அரவணைப்பு அப்புறம் கொஞ்சம் அதிர்ஷ்டம் அல்லது விதி  இதெல்லாம் வேண்டும் அல்லவா வாழ்வில் உயர ?

இல்லை. இது எதுவும் வேண்டாம் என்கிறார் வள்ளுவர்.

வாழ்வில் உயர இவை அல்ல வேண்டுவது.

என்னது ? உழைப்பும், நேர்மையும், கடவுள் கிருபையும், பெரியவர்களின் ஆசியும் இல்லாமல் வாழ்வில் முன்னேற முடியுமா ?

இதை எல்லாம் விட வேறு ஒன்று நாம் வாழ்வில் உயர வழி செய்யுமா ? அது என்ன ?

வெள்ளத்து அனையது மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு

என்கிறார் வள்ளுவர்.

நீர் நிலையின் மேல் தாமரை மிதக்கும். அந்த தாமரை மலரை கொஞ்சம் உயரச் செய்ய என்ன செய்ய வேண்டும் ?

கொஞ்சம் பிடித்து இழுக்கலாமா (உழைப்பு )
பூஜை செய்யலாமா (கடவுள் அருள் )

என்ன செய்தாலும் உயராது. அந்த நீர் நிலையில் உள்ள நீரின் மட்டம் உயர்ந்தால் தாமரை தானே உயரும்.

அது போல, நாம் வாழ்வில் உயர வேண்டும் என்றால், நம் மனம் உயர வேண்டும்.

மனம் உயராமல், வாழ்வில் உயரவே முடியாது. மனம் உயர்ந்தால் வாழ்வில் உயரலாம்.

அது எல்லாம் கேக்க நல்லா இருக்கு. அப்படி மனம் உயர்ந்ததால் வாழ்வில் உயர்ந்தவர்கள்  யாராவது இருக்கிறார்களா ? ஒரு உதாரணம் காட்ட முடியுமா ?

காட்ட முடியும்.

இராமாயணத்தில், இராமன் ரொம்ப கஷ்டப் பட்டான், சண்டை போட்டான், தந்தை பேச்சை கேட்டு நல்ல பிள்ளையாக கானகம் போனான், அரக்கர்களை அழித்தான்.

அவனுக்கு எப்போதும் துணையாக இருந்தான் இலக்குவன். இரவு பகல் பாராமல்   பணிவிடை செய்தான்.

அந்த இராமனை விட, அவ்வளவு தொண்டு செய்த இலக்குவனை விட ஒன்றுமே செய்யாத பரதன் உயர்ந்தான்.

எப்படி ?

பரதன் ஏதேனும் சண்டை போட்டானா ? இல்லை.

பெற்றோரை மதித்தானா ? இல்லை. பெற்ற தாயை பேய் என்று இகழ்ந்தான்.

இராமனுக்கு அல்லும் பகலும் பணிவிடை செய்தானா ? இல்லை.

பின் எப்படி அவன் உயர்ந்தான் ?

அவன் உயர்ந்தான் என்பதற்கு என்ன சான்று இருக்கிறது ?

பரதனைப் பற்றி நாம் விரிவாகப் பார்ப்போம்.

பரதன் பிறந்தவுடன் அவனுக்கு பெயர் இடுகிறார் வசிட்டர் ....



கரதலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப
விரத மறைப் பொருள் மெய்ந்நெறி கண்ட
வரதன். உதித்திடு மற்றைய ஒளியை.
‘பரதன்’ எனப் பெயர் பன்னினன் அன்றே.

பொருள் - அடுத்த ப்ளாகில்


No comments:

Post a Comment