Tuesday, November 24, 2015

பெரிய புராணம் - அயலறியாமை வாழ்ந்தார்

பெரிய புராணம் - அயலறியாமை வாழ்ந்தார்


திருநீல கண்டர் , இளமையின் வேகத்தால், காம வயபட்டு , மனைவி அல்லாத இன்னொரு பெண்ணிடம் உறவு கொண்டார். அது கண்டு பொறுக்க மாட்டாத அவரின் மனைவி "திருநீலகண்டத்தின் மேல் ஆணை, நீர் எந்தப் பெண்ணையும் தொடக் கூடாது " என்று கூறினார்.

மனைவியின் வாக்கை ஏற்று, மனைவியை மட்டும் அல்ல, வேறு எந்தப் பெண்ணையும் மனதாலும் நினையாமல் வாழ்ந்து வந்தார்.

சரி, ஏதோ கணவன் மனைவிக்கு இடையில் சண்டை வந்து விட்டது. மனைவியும் ஏதோ சொல்லி விட்டாள் என்று இல்லாமல் அவள் சொன்னதை வேத வாக்காக கொண்டு அவர் வாழத் தொடங்கினார்.

மனைவியோ, கணவனிடம் சண்டை போட்டாள் , எம்மை தொடாதே என்று ஆணையிட்டாளே தவிர வேறு ஒன்றிலும் குறை வைக்கவில்லை.

அவரைத் தொட்டு செய்யும் பணிவிடை தவிர்த்து மீதி அத்தனை காரியங்களையும் செய்து வந்தார்.

அது மட்டும் அல்ல, அவர்களுக்குள் நடந்த இந்த சண்டை, ஊடல், இந்த சங்கல்பம் அக்கம் பக்கம் யாரும் அறியாமல் மறைத்து வைத்தார்.

கணவன் மனைவிக்கு இடையில் ஆயிரம் சண்டை சச்சரவு வரலாம். வரும்.

எக்காரணம் கொண்டும், அது வெளியில் தெரியக் கூடாது. அது அவர்களுக்குள்ளேயே இருக்க வேண்டும்.

ஒரு குடும்பத்தின் மானத்தை, ஒரு குயவாணர் குலத்தில் பிறந்த ஒரு பெண் எப்படி கட்டிக் காக்கிறாள் என்று காட்டுகிறார் சேக்கிழார்.

ஒரு குடும்பத்தின் மானம், கௌரவம் அந்த வீட்டின் பெண்ணின் கையில் இருக்கிறது.

அவள் , தவறிப் போய் ஒரு வார்த்தை சொல்லிவிட்டாலும் அந்த குடுமத்தின் மானம் பறி போய் விடும்.

பாடல்

கற்புறு மனைவியாரும் கணவனார்க்கு ஆன எல்லாம்
பொற்புற மெய் உறாமல் பொருந்துவ போற்றிச் செய்ய
இல் புறம்பு ஒழியாது அங் கண் இருவரும் வேறு வைகி
அன்புறு புணர்ச்சி இன்மை அயலறியாமை வாழ்ந்தார்

பொருள்

கற்புறு மனைவியாரும் = கற்பு அமைந்த அந்த மனைவியும்

கணவனார்க்கு = கணவருக்கு

ஆன எல்லாம் = தேவையான எல்லாம்

பொற்புற = பொறுப்புடன்

மெய் உறாமல் = உடல் மட்டும் தொட்டுக் கொள்ளாமல்

பொருந்துவ = தேவையானவற்றை

போற்றிச் செய்ய = விரும்பிச் செய்தார். ஏதோ கடனுக்கு என்று செய்யவில்லை.

இல் புறம்பு ஒழியாது = வீட்டு விஷயம் வெளியில் தெரியாமல்

அங் கண் இருவரும் = அவர்கள் இருவரும்

வேறு வைகி = வேறு வீரு ஆளாக நாட்களை கடத்தி வந்தனர்

அன்புறு = அன்புடன் ஏற்படும்

புணர்ச்சி இன்மை = உடல் உறவு இல்லாமையை

அயலறியாமை வாழ்ந்தார் = வெளியில் உள்ளவர்க்கள் அறியாமல் வாழ்ந்து வந்தனர்.


கணவன் மனைவிக்கு இடையில் சண்டை தான். ஊடல் தான். ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்வது  கூட கிடையாதுதான். இருந்தாலும், அது வெளியில் யாருக்கும்  தெரியாமல் எப்போதும் போல சிரித்து பேசி வாழ்கிறார்கள்.

கணவனுக்கு வேண்டியது எல்லாம் அன்போடு, விருப்போடு சிறப்பாகச் செய்து தருகிரார் அந்தப் பெண். முகம் சுழிப்பது இல்லை. முகத்தை கடு கடு என்று வைத்துக் கொள்வது இல்லை.

ஒரு புடவை  எடுத்துத் தர வில்லை என்றால், ஒரு சினிமாவுக்கு கூட்டிப் போகவில்லை என்றால்  சில வீடுகளில் பெண்மணிகளின் முகம் போகும் போக்கே தனிதான்.

தண்ணீர் செம்பும், கதவும் கிடந்து இடிபடும்.

ஆனால், இந்தப் பெண்ணோ, அன்புடன் சிரித்த முகத்துடன் அனைத்தும் செய்தார்.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.

ஒரு விலைமகளின் வீட்டுக்குப் போய் வந்தவனை அடியார்களில் ஒருவனாக  ஏற்றுக் கொள்ளும்  பக்குவமும் துணிவும் வேறு எந்த மதத்துகாவது இருக்குமா ?

மனிதர்கள் பலவீனமானவர்கள்.

தவறு செய்யும் இயல்பு உடையவர்கள்.

அந்த பலவீனங்களை ஏற்றுக் கொண்டது இந்து மதம்.

படிப்பு அறிவு இல்லாதவனுக்கும், பண வசதி இல்லாதவனுக்கும்,  தவறு செய்பவனுக்கும்  நல்ல கதி கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கையை தந்தது இந்த மதம்.


நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, வா என்று அன்போடு அழைத்துக் கொண்டது இந்த மதம்.

மதத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ,  இப்படி பட்ட தனி மனித  வாழ்க்கையை உயர்த்திப் பிடித்த பெரிய புராணத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் தானே ?

நம் பெருமை நமக்குத் தெரியவில்லை.



3 comments:

  1. ஒரு பெண் இதே தவறு செய்தால்?

    அகலிகையை கவுதமர் தள்ளி வைத்தாரே? "ஏதோ, இளமையின் வேகத்தில் தவறு செய்துவிட்டாள்" என்று ஏன் இருக்கவில்லை? அது மட்டும் இந்து மதம் இல்லையா?

    ReplyDelete
  2. Heloooooo..... R u there......chenailadhaana flood. Blore LA enna problem. It's been more than 15 days since any post.

    ReplyDelete
  3. Heloooooo..... R u there......chenailadhaana flood. Blore LA enna problem. It's been more than 15 days since any post.

    ReplyDelete