Sunday, January 3, 2016

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருபல்லாண்டு

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருபல்லாண்டு 



பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு

மனிதன், இறைவனிடம் பொதுவாகவே ஏதாவது கேட்டுக் கொண்டே தான் இருக்கிறான்.

படிப்பைக் கொடு, செல்வத்தைக் கொடு, உடல் ஆரோக்யத்தைக் கொடு, மன நிம்மதியைக் கொடு, என் பிள்ளைக்கு வேலை, நல்ல இடத்தில் திருமணம், சிக்கல்களில் இருந்து விடுதலை, என்று ஏதாவது ஒன்றைக் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.

பற்றுகளை விட்டு விட்டேன் என்று சொல்லும் துறவிகளும், ஞானிகளும் கூட முக்தி கொடு, பரமபதம் கொடு என்று கேட்கிறார்கள்.

அதுவும் இல்லாவிட்டால் , இங்கேயே, உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கும்  வரம் தா என்று வேண்டுகிறார்கள்.

காலம் காலமாக மனிதன் ஆண்டவனிடம்  எதையோ கேட்டுக் கொண்டே தான் இருக்கிறான். அவனின் தேவைகள் தீர்ந்தபாடில்லை.


இறைவா உன் கருணை  வேண்டும்,உன் அன்பு வேண்டும், உன் தயை வேண்டும் என்று உருகிக் கொண்டிருக்கிறான் மனிதன்.

இறைவன் பெரிய ஆள் தான். அவனால் எல்லாம் முடியும். மிக மிக சக்தி வாய்ந்தவன் தான்.

எதைக் கேட்டாலும் தருவான்...

அது ஒரு புறம் இருக்கட்டும்.

ஒரு தாய்  இருக்கிறாள். அவளுடைய பையன் படித்து பட்டம் பெற்று பெரிய ஆளாகி விட்டான். அவனுக்கு கீழே ஒரு பெரிய நிறுவனமே இயங்குகிறது. அவன் ஆணையை நிறைவேற்ற ஆயிரம் பேர் காத்து இருக்கிறார்கள்.

இருந்தாலும், அவன் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது , அந்தத் தாய்  " பாத்து போப்பா, ஜாக்கிரதையா போப்பா " என்று சொல்லி அனுப்பவாள் .

ஏன் ?

மகனுக்கு அறிவில்லையா ? அவனுக்கு எப்படி போக வேண்டும்  என்று  தெரியாதா ?

 தெரியும்.அது அந்தத்  தாய்க்கும்    தெரியும்.  இருந்தும்,அவள் மனதில் ஊற்றெடுக்கும் காதலால், அந்த பிள்ளையின்  மேல் உள்ள வாஞ்சையால் அவள் அப்படி சொல்கிறாள். அவனுக்கு ஒரு துன்பமும் நேர்ந்து விடக் கூடாதே என்ற கவலையில் சொல்கிறாள்.

 பக்தி இலக்கியத்தில் முதன் முதலாக , இறைவனிடம் ஒன்றும் கேட்காமல், ஒரு நன்றி கூட சொல்லாமல், "இறைவா நீ நல்லா இரு ...பல்லாண்டு காலம் நீ சௌக்கியமாக வாழ வேண்டும்  " என்று பெரியாழ்வார்  வாழ்த்துகிறார்.

இறைவனுக்கு என்ன ஆபத்து வந்து விடப் போகிறது ? வந்தாலும் அவனுக்குத் தன்னை காத்துக் கொள்ளத் தெரியாதா ?

தெரியும். அது ஆழ்வாருக்கும் தெரியும்.

இருந்தும்  பெருமாள் மேல் அவ்வளவு காதல்.

நீ பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்.


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்.

ஒரு தாய், தன் பிள்ளையை வாழ்த்துவதைப் போல வாழ்த்துகிறார்.


இவர் வாழ்த்துவதைப் பார்த்து பெருமாளுக்கு ஒரே  சிரிப்பு.

எனக்கு என்ன ஆபத்து வந்து விடும் என்று நீர் என்னை வாழ்த்துகிரீர். என்னுடைய தோள்களைப் பாரும். பெரிய பெரிய மல்லர்களை வீழ்த்திய தோள்கள் என்று தன் தோள்களைக் காட்டுகிறான் அவன்.

 அதைப் பார்த்ததும் , ஆழ்வாருக்கு இன்னும் பயம் வந்து விட்டது....

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு


என்ன பயம் ?














3 comments:

  1. Kadavule , engalukku vera onnum vendaam. Indha 2016 LA idhu maadhiri dhinam oru blog podhum.

    ReplyDelete
  2. Naanmani kadigai il baakki moonu vari enga? Eppo varum?

    ReplyDelete
  3. Naanmani kadigai il baakki moonu vari enga? Eppo varum?

    ReplyDelete