Friday, September 30, 2016

இராமாயணம் - வீடணன் சரணாகதி

இராமாயணம் - வீடணன் சரணாகதி 


வீடணன்  படித்தவன்.அறிஞன். ரொம்ப படித்தவர்களுக்கு சரணாகதி என்பது அவ்வளவு எளிது அல்ல. அறிவு  தடுக்கும்.  அறிவு ஆயிரம் கேள்வி கேட்கும். ஆயிரம் சந்தேகம் எழுப்பும்.     எல்லாவற்றையும் விட்டு விட்டு நீயே சரண் என்று போக முடியுமா ?

வீடணன் போனான். அவன் பெரிய  மேதை. மிக்க படித்தவன்.

போவதற்கு முன்னால் , இராவணனுக்கு அறிவுரை சொல்லுகிறான்.

பாடல்

'இசையும் செல்வமும் உயர் குலத்து இயற்கையும் எஞ்ச,

வசையும் கீழ்மையும் மீக்கொள, கிளையொடும் மடியாது,

அசைவு இல் கற்பின் அவ் அணங்கை விட்டருளுதி; இதன்மேல்

விசையம் இல்' எனச் சொல்லினன்-அறிஞரின் மிக்கான்.


பொருள்


'இசையும் = புகழும்

செல்வமும் = செல்வமும்

உயர் குலத்து = உயர்ந்த குலத்து

இயற்கையும் = தன்மையும்

எஞ்ச = இருக்க

வசையும்  = வசைச் சொற்களும்

கீழ்மையும் = கீழான செயல்களும்

மீக்கொள,= மேலோங்கி நிற்க

கிளையொடும் = உறவினர்களோடும்

மடியாது = இறந்து போகாமல்

அசைவு இல் கற்பின் = உறுதியான கற்பு உடைய

அவ் அணங்கை = அந்தப் பெண்ணை, சீதையை

விட்டருளுதி;= விட்டு அருளுதி

இதன்மேல் = இதைவிட

விசையம் இல்' = உயர்ந்தது ஒன்றும் இல்லை

எனச் சொல்லினன் = என்று சொல்லினான்

அறிஞரின் மிக்கான் = அறிவுள்ளவர்களில் சிறந்தவனான வீடணன்

உன்னுடைய புகழும், செல்வமும், உயர் குடி பிறப்பும் எல்லாம் போய் விடும். சீதையை விட்டு விடு என்கிறான்.

வீடணனுக்கு கம்பன் ஒரு அடை மொழி தருகிறான் - அறிஞரின் மிக்கான் என்று. அறிவுள்ளவர்களில் தலை சிறந்தவன் என்று.

அவன் மேலும் என்ன சொல்லுகிறான் என்று பார்ப்போம்.





No comments:

Post a Comment