Tuesday, December 1, 2020

திருக்குறள் - வாழ்வின் நோக்கம்

 திருக்குறள் - வாழ்வின் நோக்கம் 


இந்த வாழ்வின் நோக்கம் என்ன? நாம் ஏதோ ஒன்றை சாதிக்க வேண்டும் என்று நினைத்துப் பிறக்கவில்லை. இந்த நாட்டில், இந்த மதத்ததில், இந்த மொழி பேசும் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று நினைத்து நாம் பிறக்கவில்லை. நம் பிறப்பு நம் கையில் இல்லை. 


ஒரு நோக்கமும் இன்றி பிறந்து விடுகிறோம். பிறந்த பின் என்ன செய்வது? எப்படி வாழ்வது? இந்த வாழ்கையை எப்படி செம்மையாக கொண்டு செல்வது? என்று எப்படி கண்டு பிடிப்பது?

நம் வாழ்க்கைக்கு ஒரு குறிக்கோள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாழ்க்கைக்கு என்று பொதுவாக ஏதாவது குறிக்கோள் இருக்கிறதா? 


சரி அப்படி இருந்தால், எல்லார் வாழ்கையும் ஒரே மாதிரி ஆகி விடாதா?  திருக்குறள் என்று இல்லை, எந்த ஒரு நூலும் வாழ்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா ?


இப்படி யோசிப்போம். எத்தனையோ அறிவியல் விதிகள் இருக்கின்றன. உலகில் உள்ள பொருள்கள், உயிர்கள் உட்பட அந்த விதிகளுக்கு உட்பட்டுத்தான் இயங்குகின்றன. அதனால் என்ன குறைந்து போய் விட்டது? 


எப்படி அறிவியல் விதிகள் உலகியல் பொருள்களை விளக்கம் செய்கின்றனவோ, அது போல் திருக்குறள் போன்ற நூல்கள் வாழ்வியலை நமக்கு விளக்கம் செய்கின்றன. 


ஆயிரக்கணக்கான பேரின் வாழ்க்கைகளை கூர்ந்து நோக்கி, வாழ்வின் பின்னால் இப்படி ஒரு சில விதிகள் இருக்கின்றன என்று கண்டு சொல்கின்றன இந்த நூல்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post.html

click the above link to continue reading



அவை என்ன விதிகள் ? அந்த விதிகளை தெரிந்து கொள்வதால் நமக்கு என்ன பயன்? தெரியாவிட்டால் என்ன ஆகி விடும்?  அந்த விதிகளை எப்படி நம் வாழ்வில், நமக்கு இன்பம் தரும் படி பயன் படுத்திக் கொள்வது?


இவை பற்றி சிந்திப்போம். 


விதிகளை தெரிந்து கொள்வதால் அதன் படி நடக்க வேண்டும் என்று இல்லை. 

உயரத்தில் இருந்து குதித்தால் கீழே விழுவோம், விழுதால் அடி படும், வலிக்கும் என்பது விதி. 


இல்லை நான் குதித்துப் பார்கிறேன். ஒருவேளை நான் கீழே விழாமல் காற்றில் மிதந்தாலும் மிதக்கலாம்...யார் கண்டது என்று குதித்து முயற்சி செய்து பார்க்கலாம். தவறு ஒன்றும் இல்லை. 


விதிகள் தெரிந்தால், அதை கடை பிடித்தால் , வாழ்கை நன்றாக இருக்கும். அவ்வளவுதான். 


அப்படி என்ன பெரிய விதிகளை திருக்குறள் கண்டு சொல்லி விட்டது?


பார்ப்போம். 



No comments:

Post a Comment