Thursday, December 10, 2020

திருக்குறள் - முப்பால்

 திருக்குறள் - முப்பால் 


வாழ்வின் அடிப்படை துறவறம் என்று பார்த்தோம். துறவறம் தான் நோக்கமா? எல்லாவற்றையும் விடுவதற்கா வாழ்கை என்றால் இல்லை. 

வாழ்வின் நோக்கம் வீடு பேறு. வீடு பேறு அடைய துறவறம் வேண்டும். வீட்டின் வாயில் துறவறம். அதன் வழியாகத்தான் போயாக வேண்டும். 

வீடு என்றால் என்ன, அதை ஏன் அடைய வேண்டும் என்று பின்னால் சிந்திக்க இருக்கிறோம். 

இப்போது, துறவறம் நோக்கம் , முக்கியம் என்றால் பின் இல்லறம் எதற்கு? நேரே துறவுக்கு போய் விட்டால் என்ன? 

பிரமச்சரியம், துறவறம், வீடு என்று இருந்தால் என்ன? எதுக்கு நடுவில் இல்லறம்? 

சரி இல்லறம் இருந்து விட்டுப் போகிறது. இந்த அறம் பொருள், இன்பம் என்று மூன்றாக பிரித்து இருக்கிறாரே, பொருளும் இன்பமும் எதற்கு? 

இப்படி பல சிக்கலான கேள்விகள் எழுகின்றன.


சிக்கலை அவிழ்போம். 


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_10.html


click the above link to continue reading


வாழ்வின் நோக்கம் - வீடு பேறு.


வீடு பேறு அடைய முக்கியமான தேவை - துறவு. 


துறவு நிலைக்குப் போகவேண்டுமானால் - அருள் வேண்டும். 


அருள் வர வேண்டும் என்றால் முதலில் அன்பு வேண்டும். 


அன்பு மனதில் சுரக்க வேண்டும் என்றால் பிள்ளை வேண்டும். 


பிள்ளை வேண்டும் என்றால் கணவன் மனைவி உறவு வேண்டும். இன்பம் வேண்டும்.  


குடும்பம் நன்றாக நடக்க வேண்டும் என்றால் பொருள் வேண்டும். 


எனவே முதலில் இல்லறம். இல்லறம் சிறப்பாக நடக்க, காமம், இன்பம் என்ற ஒரு எதிர்பார்ப்பு, தேவை. அவை செவ்வனவே நடக்க பொருள். இவற்றை அனுபவித்து கடக்கும் போது தானே துறவறம் வந்து நிற்கும். 


துறவு வந்தால், வீடு வரும். 


இது வள்ளுவர் வகுத்துக் காட்டும் அறம், வாழ்கை நெறி. 


நீங்கள் நினைக்கலாம், "வீடு பேறு என்று ஒன்று கிடையாது. அல்லது வேண்டாம்" என்று வைத்து விட்டால், பின் வள்ளுவம் பூராவும் விழுந்து விடும் அல்லவா?


ஆம். சரிதான். ஆனால், வீடு பேறு வாழ்வின் நோக்கம் இல்லை என்று எடுத்துக் கொண்டால், பின் வேறு என்ன என்று சொல்ல வேண்டும். அந்த புதிய நோக்கத்தை அடைவது எப்படி என்று சொல்ல வேண்டும். 


வள்ளுவர் மிக மிக ஆழமாக சிந்தித்து திருக்குறளைப் படைத்து இருக்கிறார். 


அதற்கு இணையாக ஒன்றை சிந்திப்பது என்பது மிக மிக கடினமான காரியம். 


அறத்துப் பால். 

அதன் உள்ளே இல்லறம், துறவம் என்ற இரண்டு பெரிய அறங்கள். 


இல்லறம் நடக்க  இன்பத்துப் பால். 


இல்லறம், இன்பம், பிள்ளை இவற்றை கொண்டு செல்ல பொருட் பால் என்று பிறந்தது முதல், வீடு பேறு வரை ஒவ்வொரு கட்டமாக பிரித்து கை பிடித்து கூட்டிச் செல்கிறார். 


பால், இயல், அதிகாரம், குறள் என்று முதலில் இருந்து இறுதி வரை ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டது. 


ஒரு முழு வாழக்கைக்கும் ஒரு வழிகாட்டி. 


இப்படி ஒரு நூலை காணவே முடியாது.


இனி திருகுறளுக்குள் போவோம். 


1 comment:

  1. தங்கள் பார்வையும், விளக்கமும் மிக அருமை! மேலு‌ம் சிந்திக்க தூண்டுகிறது! பகிர்வுக்கு மிக்க ந‌ன்றி!

    ReplyDelete