Sunday, December 6, 2020

திருக்குறள் - அறமெனும் வாழ்க்கை

 திருக்குறள் - அறமெனும் வாழ்க்கை 


பொதுவாகச் சொல்லப்படும் பிரம்மச்சரியம், இல்வாழ்கை, வானப்ரஸ்தம், சன்யாசம் என்ற வாழ்க்கையின் நான்கு கூறுகளை வள்ளுவர் இரண்டுக்குள் அடக்குகிறார். 


இல்லறம், துறவறம் என்ற இரண்டில் அதை அடக்குகிறார். 


எப்படி ?


பிரம்மச்சரியம் என்பது இல்வாழ்வின் முதல் பகுதி. எனவே அதை இல்லறத்தில் சேர்த்து விட்டார். 


வானப்ரஸ்தம், சன்யாசம் என்ற இரண்டும் துறவறத்தின் இரண்டு படிகள் என்பதால் அவற்றை துறவரத்தோடு சேர்த்து விட்டார். 


இல்லறம், துறவறம் - இதுதான் வாழ்கை. 


எங்கே இதற்கு வெளியே ஒரு அமைப்பை சிந்தியுங்கள் பார்ப்போம்? முடியாது. 


எப்படி சுத்தினாலும், இந்த இரண்டுக்குள் வந்துதான் ஆக வேண்டும். 


இந்த இரண்டில் வேண்டுமானால் மேலும் சில பிரிவுகளை நாம் உண்டு பண்ணிக் கொள்ளலாம். பெரும் பகுதி என்பது இது தான். 


வள்ளுவர் பார்வையில் இல்லறத்த்தின் நோக்கம் துறவறம் தான். 


அதானே...கடைசியில் எல்லோரையும் கையில் ஒரு சட்டியை கொடுத்து சாமியாராகப் போகச் சொல்லுவதுதான் இந்த இலக்கியங்களின் நோக்கம். 


எப்பப் பாரு, நிலையாமை, துறவறம், சாவு என்று இதையே பேசிக் கொண்டு இருப்பது. 


சந்தோஷமாக வாழ வழி சொல்லுவதே இல்லை. யார் இதை எல்லாம் படிப்பார்கள் என்ற அலுப்பு வரலாம்.


நம்பினால் நம்புங்கள்....நம்பாவிட்டால் உங்கள் இஷ்டம்...நாளும் நீங்கள் துறவறம் நோக்கித் தான் நகர்ந்து கொண்டு இருக்கிரீர்கள். நீங்கள் அறிவது இல்லை. 


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_6.html

click the above link to continue reading 


நீங்கள் விரும்பி சில அடிகள், நீங்கள் விரும்பாமல் சில அடிகள் என்று ஒவ்வொரு நாளும் துறவறம் நோக்கித் தான் நடை போட்டுக் கொண்டு இருக் கிறீர்கள்.


இல்லியே...நான் வாழ்கையை அனுபவிக்க அல்லவா துடித்துக் கொண்டு இருக்கிறேன். மனைவி, பிள்ளைகள், சொத்து, சுகம், உறவு, பட்சணம், விருந்து, பூஜை, புனஸ்காரம், டிவி, whatsapp என்று வாழ்க்கையை முழுவதுமாக அனுபவித்துக் கொண்டு தானே இருக்கிறேன். எங்கே துறவறம் நோக்கி நடக்கிறேன் என்று நீங்கள் கேட்கலாம்.


சொல்கிறேன். ஆச்சரியப் பட்டுப் போவீர்கள்.



No comments:

Post a Comment