Sunday, February 7, 2021

ஆசாரக் கோவை - உடை உடுத்தல்

 ஆசாரக் கோவை - உடை உடுத்தல் 


நமது அகமும் புறமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை.  அகத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்றால், முதலில் புறத்தை சுத்தம் செய்ய வேண்டும். புறம் அகத்தை பாதிக்கும். 

எனவேதான் ஆசாரக் கோவை போன்ற நூல்கள் புறத் தூய்மை பற்றி பேசுகின்றன. இதைப் படித்து விட்டு, இதோடு நின்று விடக் கூடாது. அகத் தூய்மை பற்றி சிந்திக்க வேண்டும். 


உண்ணும் உணவில், உடுக்கும் உடையில் இருக்கிறது நம் கலாச்சாரம், பண்பாடு. 

கூழானாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்பது நம் பண்பாடு, கலாசாரம். 


Bed coffee அவர்கள் கலாசாரம். எழுந்து பல் கூட விளக்காமல் காப்பி குடிப்பது 

கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு என்பது நம் பாரம்பரியம். நல்ல துணியை கிழித்து, அழுக்காகி, துவைக்காமல் நாள் கணக்கில், மாதக் கணக்கில் உடுப்பது அவர்கள் பாரம்பரியம். ஜீன்ஸ் என்று ஒன்று இருக்கிறது. அங்கங்கே கிழிந்து இருக்கும், இதில் துப்பாகியால் சுட்டு ஓட்டை விழுந்த ஜீன்ஸ் என்றால் மதிப்பு கூட. 


எது சரி, எது தவறு என்பதல்ல நோக்கம். நாம் எதை விட்டு விட்டு எதை நோக்கிப் போய் கொண்டு இருக்கிறோம். 


நம் பண்பாட்டினை அவர்களுக்கு சொல்லித் தருவதை விட்டு விட்டு, அவர்கள் செய்வதை பெருமையாக நாம் செய்து கொண்டு இருக்கிறோம். 


எப்படி உடை உடுக்க வேண்டும் என்று ஆசாரக் கோவை சொல்கிறது. 


"ஏதேனும் ஒன்றை உடுக்காமல் நீராட மாட்டார்கள். குறைந்தது இரண்டு உடையாவது அணிந்து தான் உணவு உண்ணுவார்கள். அழுக்குத் துணியை நீரில் பிழிய மாட்டார்கள். தண்ணீரில் முக்கி வெளியே பிழிவார்கள். ஒற்றை ஆடை உடுத்து சபையில் நுழைய மாட்டார்கள், பெரியவர்கள்" 


பாடல் 

உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத் துண்ணார்

உடுத்தாடை நீருட் பிழியார் விழுத்தக்கார்

ஒன்றுடுத் தென்றும் அவைபுகா ரென்பதே

முந்தையோர் கண்ட முறை.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/02/blog-post_7.html


(click the above link to continue reading)


உடுத்தலால் = உடை உடுக்காமல் 

நீராடார் = குளிக்க மாட்டார்கள் 

ஒன்றுடுத் துண்ணார் = ஒரு துணியை உடுத்தி உண்ண மாட்டார்கள். அதாவது குறைந்தது இரண்டு உடையாவது அணிந்து தான் உண்பார்கள். 

உடுத்தாடை = உடுத்த ஆடையை 

நீருட் பிழியார் = நீரில் பிழிய மாட்டார்கள் 

விழுத்தக்கார் = பெருமை உள்ளவர்கள், பெரியவர்கள் 

ஒன்றுடுத் தென்றும் = ஒற்றை ஆடையி உடுத்து என்றும் 

அவைபுகா ரென்பதே = எந்த அவையிலும் நுழைய மாட்டார்கள் என்பதே 

முந்தையோர் கண்ட முறை. = முன்னோர்கள் கண்ட முறை 


சில ஆசாரங்களுக்கு காரணம் தெரியவில்லை. அதற்காக அதை விட்டு விடுவதா அல்லது அவற்றை பின்பற்றிக் கொண்டே அதற்கான காரணத்தை தேடுவதா? 


யோசிப்போம். 



No comments:

Post a Comment